
காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாபெரும் சிலம்பாட்ட போட்டி காஞ்சிபுரம் சிலம்பாட்ட கழகத் தலைவரும், முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளருமான முத்துராமன் ஜி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் கலைச்சுடர் எஸ்.ஆர்.லட்சுமணன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் கே.ஜி. முரளி கிருஷ்ணன் சிலம்பாட்ட போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில் சென்னை மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் சீனிவாசன், செங்கல்பட்டு மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் சென்னகேசவலு, மற்றும் செல்வம், வெங்கடேசன், வேலு, காஞ்சிபுரம் மாவட்ட ஆலோசகர் மோகனரங்கன் மற்றும் எழுத்தாளர் பாலகிருஷ்ணன், கார்த்திக், திரவியன், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.