Tuesday , April 22 2025
Breaking News
Home / Politics / காஷ்மீர் இந்தியாவில் இருப்பதற்கு காரணமானவர் ஜவஹர்லால் நேரு: கே.எஸ்.அழகிரி பேட்டி

காஷ்மீர் இந்தியாவில் இருப்பதற்கு காரணமானவர் ஜவஹர்லால் நேரு: கே.எஸ்.அழகிரி பேட்டி

காஷ்மீர் இந்தியாவில் இருப்பதற்கு காரணமானவர் ஜவஹர்லால் நேரு: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்த நாளையொட்டி, கிண்டி கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு அருகே அலங்கரிக்கப்பட்ட படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று நடந்தது.

இதில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, நிர்வாகிகள் கோபண்ணா, விஜய் வசந்த் எம்பி, அசன் மவுலானா எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர். நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவை மறு உருவாக்கம் செய்தவர், இந்தியாவை உலகத்தில் வல்லரசாக மாற்றியவர் ஜவஹர்லால் நேரு. இன்று, காஷ்மீர் இந்தியாவில் இருக்கிறது என்றால் அதற்கு காரணமாக இருந்தவர் நேரு. ஓபிசி சமூகம் வளமாக வாழ்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் நேரு. அவரை போன்ற ஒரு சிற்பி இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. கோயில்களில் அனைவரும் தரிசிக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களை கோயிலில் அனுமதிக்காத கூட்டம் பாஜ கூட்டம். இவ்வாறு அவர் கூறினார்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவனை கிராமத்திற்குட்பட்ட பாப்பனம்பட்டியில் உள்ள பாப்பான்குளத்தில் குளம் தூர் வாரும் திருவிழா…

வரவனை கிரமத்திற்குட்பட்ட 21 குளங்களையும் தூர் வார முடிவெடுத்து எயிட் இந்தியா மற்றும் கைஃபா அமைப்பின் உதவியுடன் பசுமைக்குடி தூர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES