Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் மேலூரில் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம்
NKBB Technologies

மதுரை மாவட்டம் மேலூரில் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் மேலூரில் பெரியாறு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பாஜக கிழக்கு மாவட்டம் சார்பாக விவசாய அணி மாவட்ட தலைவர் பூமிராஜன் தலைமையிலும், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மஹாலக்ஷ்மி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் பொதுச்செயலாளர்கள் வக்கீல் கண்ணன், கோசப்பெருமாள், துணைத்தலைவி மஞ்சுளா, மாவட்ட செயலாளர் ஹரிஹரன், ஆன்மிக பிரிவு தலைவர் தர்மலிங்கம், கல்வியாளர் பிரிவு தலைவர் ராஜூ, ஐ.டி விங் தலைவர் மகா மணிகண்டன், உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் தங்கவேல்சாமி, முன்னாள் ராணுவ பிரிவு மாநில செயலாளர் ஆனந்தஜெயம், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அமிர்தராஜ், விவசாய அணி தங்கையா,ஓ.பி.சி அணி தலைவர் பாஸ்கர், வழக்கறிஞர் பிரிவு தலைவர் பிரபாகரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் காசிநாதன், மேலூர் தொகுதி மண்டல் தலைவர்கள் ராஜாமணி, ஜெயசித்ரா, குமார், ராஜராஜன், திருப்பதி , மற்றும் மதுரை கிழக்கு மாவட்ட அணி, மண்டல், பிரிவு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் மேலூர் நகர் மண்டல் தலைவர் சேவுகமூர்த்தி நன்றி கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES