Monday , June 9 2025
Breaking News
Home / கரூர் / பள்ளபட்டி உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் முடிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பள்ளபட்டி உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் முடிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பதிவு நாள்: 24/12/2023

பள்ளபட்டி காங்கிரஸ் கமிட்டியின் சிபாரிசின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 21 லட்ச ரூபாய் செலவில், பள்ளபட்டி உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் முடிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கரூர் மாவட்ட சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் திரு அண்ணம்பாரி ஜக்கரியா, பள்ளப்பட்டி நகர தலைவர் திரு.அன்சார் அலி, பள்ளப்பட்டி பாப்புலர் அபுதாஹிர், மனிதநேய மக்கள் கட்சி & தமுமுக மாவட்டத் தலைவர் திரு சாகுல் ஹமீது, அரவக்குறிச்சி காங்கிரஸ் கமிட்டியின் வட்டார தலைவர் திரு.காந்தி, முன்னாள் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு சதாசிவம் அவர்களின் மகன் தமிழ்மணி, வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் திரு.க.முகமது அலி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.க.பாலமுருகன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறை மாவட்ட பொதுச் செயலாளர் திரு. சாகுல் அமீத், மாவட்ட தகவல் தொழில்நுட்பம் செயற்குழு உறுப்பினர்கள் ஷேக் அப்துல் காதர், திரு.சுகைப், திரு.சாதிக் ஹாஜியார், பள்ளப்பட்டி நகராட்சி 16வது உறுப்பினர் சம்ரானா, அரவக்குறிச்சி பாதிரியார் மகேஷ், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பள்ளப்பட்டி முக்கிய பிரமுகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES