
மதுரை மாநகராட்சி வார்டு 1 புதுவிளாங்குடி நேருஜி மெயின் ரோட்டில் புதிதாக தார்சாலை விரைவில் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் மீனாட்சி காபி பாரில் இருந்து பாலமுருகன் கோவில் வரை சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர்.
பொதுமக்களே தாமாக ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான காலஅவகாசம் மாநகராட்சி சார்பாக ஏற்கனவே வழங்கியும், அகற்றாததால் ஜேசிபி புல்டோசர் மூலம் இன்று அதிரடியாக அகற்றப்பட்டது.
கூடல்புதூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்