Monday , June 9 2025
Breaking News
Home / தமிழகம் / சி.ஏ.ஏ. எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்

சி.ஏ.ஏ. எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்

*சி.ஏ.ஏ. எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் !*

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .

மத்திய பா ஜ க அரசு கொண்டு வந்துள்ள சி.ஏ.ஏ., என்.பி.ஆர் மற்றும் என்.சி.ஆர்க்கு எதிராக சென்னை பழய வண்ணார பேட்டையில் நேற்று நடை பெற்ற அமைதியான வழியில் போராட்டம் நடத்திய பெண்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீது கண்முடிதமாக தடியடி நடத்திய காவல் துறையினரை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது .

காவல் துறையின் கண்முடிதனமான இத்தாக்குதலில் போராட்ட காரர்கள் சிலர் படு காயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளார். போராட்ட களத்தில் பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்த ஆண்களை தர தர வெனு இழுத்து அடித்து கைது செய்ய பட்டது . போராட்டகாரர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுவர்களை ஓடுக்க வேண்டும் என்பதற்க்காக இந்த காவல் துறை தடியடி நடத்தியுள்ளதா என சந்தேகம் எழுகிறது ? மேலும் இச்சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .

நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ. என்.பி.ஆர். என்.ஆர்.சி. நிறைவேற்ற பட்ட நாள் முதல் இன்று வரையிலும் இந்தியா முழுவதும் இந்த கருப்பு சட்டத்தை எதிர்த்தும் மத்திய பா ஜ க அரசை கண்டித்தும் மக்கள் போராடி வருகிறார்கள் . குறிப்பாக தமிழகத்தில் ஜனநாயக ரீதியான தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். அரசுயிடம் கோரிக்கை வலியுறுத்தி அகிம்சை வழியில் போராடுவது ஜனநாயக உரிமை .

எனவே : சி. ஏ.ஏ. என்.ஆர்.சி.என்.பி.ஆர்க்கு எதிராக பல்வேறு மாநிலத்தில் சட்ட பேரவையில் திர்மானம் நிறைவேற்றபட்டது . அதைபோல் தமிழகத்திலும்
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சட்ட பேரவையில் சி.ஏ.ஏ. என்.ஆர்.சி. என்.பி.ஆர்க்கு எதிராக திர்மானம் நிறை வேற்ற பட வேண்டும் எனவும். மேலும் அப்பாவி மக்கள் மீது தடியடி நட்த்திய காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES