Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் துவரிமான் கிராமத்தில் மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம்

மதுரை மாவட்டம் துவரிமான் கிராமத்தில் மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம்

துவரிமானில் மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம்

மதுரை, மார்ச்.07-

பாஜக மதுரை மாநகர் மாவட்ட பரவை மண்டல் துவரிமான் கிளை சார்பாக மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மண்டல் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ்கண்ணன், விவசாய அணி மாவட்ட தலைவர் துரை பாஸ்கர், எஸ்.டி அணி மாவட்ட பொதுச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை துவரிமான் பகுதி கிளைத்தலைவர் ஜெயமணி வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் பாஜக மதுரை மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா.சுசீந்திரன் கலந்து கொண்டு
பத்தாண்டு கால பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அவர் செய்த பல்வேறு சாதனைகள் குறித்து விளக்கி பேசினார்.

இதில் மாவட்டத் துணைத் தலைவர் வினோத்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கிருஷ்ணன், சந்தோஷ் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் நவீன் அரசு, மாவட்ட மகளிரணி தலைவி ஓம்சக்தி தனலட்சுமி, பிரச்சாரப் பிரிவு மாவட்ட செயலாளர் பிரபு நடராஜன், மண்டல் பொருளாளர் ரமணி, எஸ்.டி அணி மாவட்ட செயலாளர் கருப்பசாமி என்ற விஜி, காளவாசல் மண்டல் தலைவர் பிச்சைவேல், விவசாய அணி மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மண்டல் பொதுச்செயலாளர் இருளப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் மண்டல் பொதுச்செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES