Friday , January 30 2026
Breaking News
Home / செய்திகள் / IPl 2024: “நான் இவ்வளவு நாள் ஒய்வில் இருந்தது ஐபிஎல்-காக அல்ல!” – ஓய்வு குறித்து ஹர்திக்
NKBB Technologies

IPl 2024: “நான் இவ்வளவு நாள் ஒய்வில் இருந்தது ஐபிஎல்-காக அல்ல!” – ஓய்வு குறித்து ஹர்திக்

IPl 2024: "நான் இவ்வளவு நாள் ஒய்வில் இருந்தது ஐபிஎல்-காக அல்ல!" - ஓய்வு குறித்து ஹர்திக்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா ஓய்வு குறித்தும், உலகக்கோப்பை குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

ஹர்திக் ஏற்கெனவே மும்பை அணியில்தான் ஆடி வந்தார். இடையில் குஜராத் அணியால் வாங்கப்பட்டு கேப்டனாக்கப்பட்டார். முதல் சீசனிலேயே ஹர்திக் அந்த அணியைச் சாம்பியனாக்கியிருந்தார். இரண்டாவது சீசனில் ரன்னர் அப். இந்நிலையில், வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த ஹர்திக்கை மும்பை அணி ட்ரேடிங் முறையில் வாங்கியது. ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஹர்திக்கை மும்பை அணியின் கேப்டனாகவும் அறிவித்தார்கள். ஹர்திக் பாண்டியா

மார்ச் 22 ஆம் தேதியான நாளை முதல் ஐபிஎல் தொடங்கவிருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் வான்கடே மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா அவரது ஓய்வு குறித்தும், உலகக்கோப்பை குறித்தும் ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசியிருக்கிறார்.

“நான் இவ்வளவு நாள் ஓய்வில் இருந்ததற்குக் காரணம் ஐபிஎல்-காக இல்லை. ஐபிஎல் அதில் ஒரு பகுதியாக இருக்கலாம். ஐபிஎல்-க்கு பிறகு ஒரு பெரிய குழந்தையான உலகக் கோப்பையை மீண்டும் சந்திக்க வேண்டியுள்ளது. நான் உலக கோப்பைகளை என் குழந்தைகளாகவே எப்போதும் பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார். ஹர்திக் பாண்டியா

கடந்த அக்டோபர், நவம்பரில் உலகக்கோப்பைத் தொடர் நடந்திருந்தது. இந்தத் தொடர் முழுவதும் ஆடிய ஹர்திக் தொடருக்குப் பிறகு காயத்தில் சிக்கினார். அதன்பிறகு காயம் காரணமாக பெரும்பாலான தொடர்களில் ஆடாமல் இருந்தார். இப்போது ஐ.பி.எல் தொடங்கவிருக்கும் நிலையில் முழு உடற்தகுதியையும் பெற்று மீண்டும் களத்தில் இறங்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES