Friday , January 30 2026
Breaking News
Home / தமிழகம் / சிவகாசியில் குமுதம் நிருபர் கார்த்தி மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !
NKBB Technologies

சிவகாசியில் குமுதம் நிருபர் கார்த்தி மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

சிவகாசியில் குமுதம் நிருபர் கார்த்தி மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .

விருதுநகர் மாவட்டம் , சிவகாசியில் குமுதம் , இதழின் மாவட்டசெய்தியாளர் கார்த்தி மீது நேற்று (03-03-2020) செவ்வாய்க்கிழமை இரவு கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது .

இந்த கொடூர தாக்குதலில் நிலை குலைந்து போன நிருபர் கார்த்தி சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் கார்த்தியின் மருத்துவ செலவுகளை தமிழக அரசு பொற்பு ஏற்க வேண்டும் , தமிழகத்தில் செய்தியாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடந்த வண்ணமாக உள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .

எனவே : செய்தியாளர் கார்த்தி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கண்டறிந்து காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்க பட்ட செய்தியாளர் கார்த்திக்கு உதவி தொகை 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் , பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES