Monday , June 9 2025
Breaking News
Home / இந்தியா / கொரோனா பயத்தால்’ பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை… உச்சகட்டமாக ஆண்டுத்தேர்வை ‘ரத்து’ செய்து… கோடை ‘விடுமுறை’ அறிவித்த பள்ளி

கொரோனா பயத்தால்’ பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை… உச்சகட்டமாக ஆண்டுத்தேர்வை ‘ரத்து’ செய்து… கோடை ‘விடுமுறை’ அறிவித்த பள்ளி

கொரோனா அச்சத்தால் பள்ளி ஒன்று ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து கோடை விடுமுறை அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக பெங்களூரில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளையும் நாளை மூடுமாறு கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை முதல் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டு என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கிழக்கு பெங்களூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்னும் பள்ளியொன்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து, கோடை விடுமுறையாக அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடைசியாக நடத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையில், மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அந்த பள்ளி அறிவித்துள்ளது. இதேபோல கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES