Monday , June 9 2025
Breaking News
Home / இந்தியா / ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்

ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்

இன்று (11.03.2020) இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிடையூர் இணைந்து இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இரத்த தானத்தின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இதில் 64 மாணவ மாணவிகள் ரத்ததானம் வழங்கினர் பெறப்பட்ட இரத்தம் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் கலந்து கொண்ட இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் ரமதரன் வட்டார மருத்துவ அலுவலர், டாக்டர் ரமேஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பஞ்சட்சரம், சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, கார்த்திக் குமார், வெங்கடாசலம் ஆகியோர்களுக்கு கல்லூரி நிறுவனர் டாக்டர் சுஜாதா அவர்கள் நன்றியை தெரிவித்தார்.

YouTube player
Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES