Friday , December 19 2025
Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின், வணிகர் தின பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம்
NKBB Technologies

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின், வணிகர் தின பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் 41-வது வணிகர் தின பாதுகாப்பு மாநாடு மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம் கோவை மண்டலத்தில் ஆரம்பித்து நெல்லை, தூத்துக்குடி வழியாக மதுரை வந்தடைந்தது.

பின்னர் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையில் இருந்து ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சூசை அந்தோணி முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் ஜெயக்குமார் தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், மாநில செயலாளர் குட்டி என்ற அந்தோணிராஜ், வடக்கு பகுதி தலைவர் சரவணன், மண்டல துணைத் தலைவர் வாசுதேவன், விரகனூர் பகுதி செயலாளர் ஆனந்தன், தெற்கு பகுதி செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES