Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / அழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கிய சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன்..!
NKBB Technologies

அழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கிய சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன்..!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில் கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் தலைமையில்
39-வது ஆண்டு மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது.

வைகை ஆற்றில் எழுந்தருளி விட்டு கள்ளழகர் வண்டியூருக்கு செல்லும் நாளான செவ்வாய்க்கிழமை அன்றும், மீண்டும் ராமராயர் மண்டகப்படியை நோக்கி செல்லும் நாளான புதன்கிழமை அன்றும் இரண்டு நாளாக புளியோதரை, லெமன் சாதம், தயிர் சாதம், பாயாசம், சுண்டல் பயறு, படாடாணி பயறு போன்ற பத்து வகையான உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் பாத்திரக்கடை நாகராஜ், குணா அலி, நாகேந்திரன், தர்மர், பூமிராஜா, அழகர், ரத்தினம், இ.பி.கண்ணன், மகேஷ்குமார், அம்மா கண்ணன், சேது, பரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES