Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பாக அன்னதானம் நீர்,மோர் வழங்கப்பட்டது

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பாக அன்னதானம் நீர்,மோர் வழங்கப்பட்டது

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு மதுரை கலெக்டர் அலுவலக சாலை திருவள்ளுவர் சிலை அருகே தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம், அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் மற்றும் சர்வதேச சட்ட உரிமைகள் மனித நீதி சபை சார்பில் மாபெரும் அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்க மாநில தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் தலைமை தாங்கினார்.மாநில பொதுச் செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார்.அனைத்து மகளிர் மேம்பாட்டு கழக மாநில தலைவர் மஞ்சுளா தேவி,மாநில பொதுச் செயலாளர் கவிதா, துணை செயலாளர் கள்ளியம்மாள், மாவட்ட தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் வரவேற்றனர்.

விழா ஏற்பாடுகளை மாநில துணைத் தலைவர்கள் சமய செல்வம்,ஜான் ஜெயராமன், மாநில துணை செயலாளர்கள் பாண்டியன், முருகேசன், மாநில இணை செயலாளர்கள் ராஜேஸ் கண்ணன், கார்த்திக், மணிகண்ட ராஜா, அல்லா பக்ஸ், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மூர்த்தி, நாகேந்திரன், ஜான்சுந்தர், மணிகண்டன், சேவுகன்,மாநில செய்தி தொடர்பாளர்கள் அஜித் குமார், ராமசாமி உள்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

விழா முடிவில் மாநில பொருளாளர் புஷ்பராஜன் நன்றி கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES