Monday , June 9 2025
Breaking News
Home / கரூர் / கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 15 நபர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்…

கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 15 நபர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்…

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 15 நபர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருபவர்கள் 381 பேர்.

இதில், 294 நபர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று வந்தவர்கள், 87 நபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள்.

இவர்களின் வீட்டுக்கதவுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பிற மாவட்டங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்குள் வரும் 18 எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. காவல்துறையினரும், வட்டாரப்போக்குவரத்துத்துறை அலுவலர்களும் தொடர்ந்து ரோந்து பணியில் இருப்பார்கள். தேவையில்லாத வாகனங்கள் வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும்.

அவசர உதவி எண் : 04324-1077, 04324-256306, 04324-255340.
மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைக்கு 104 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். #karursafetymeasures #coronaawareness #coronainkarur #vijayabhaskar #karur

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES