Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக மலர் தூவி மரியாதை..!
NKBB Technologies

மதுரையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக மலர் தூவி மரியாதை..!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள இந்திரா காந்தி சிலை முன்பு, மதுரை மாநகர் காங்கிரஸ் கட்சி ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக அதன் மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையிலும், தொழிற்சங்க மதுரை மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.என்.பாலாஜி மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் ப.தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும், ராஜீவ்காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு தின
உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், நாஞ்சில் பால்ஜோசப், பூக்கடை கண்ணன், கே.ஆர்.சுரேஷ்பாபு, வீரவாஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள் போஸ் இளைஞரணி குருபிரசாத், பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், மூவேந்திரன், பகுதி தலைவர்கள் மீனாட்சிசுந்தரம், கோபிநாத், வார்டு தலைவர்கள் குமரகுரு, மொக்கச்சாமி, மணிவேல், பவர்.சிங்கம், ரவி, எஸ்.டி.கோபால், முருகேசன், பாலமுருகன், சரவணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் மோசடி…

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES