Sunday , July 27 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் அனைத்து தெலுங்கு அமைப்புக்கள் இணைந்து நடத்திய பேரரசி ராணி மங்கம்மாளின் பிறந்தநாள் விழா..!
NKBB Technologies

மதுரையில் அனைத்து தெலுங்கு அமைப்புக்கள் இணைந்து நடத்திய பேரரசி ராணி மங்கம்மாளின் பிறந்தநாள் விழா..!

மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் அனைத்து தெலுங்கு அமைப்புக்கள் இணைந்து நடத்திய பேரரசி ராணி மங்கம்மாளின் 375 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த நாயுடு நாயக்கர் அசோசியேசன் மாநிலத் தலைவர் பி.வி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விஜயநகர பேரரசு வரலாற்று மீட்பு குழுவின் தலைவர் கே.பி.ஆர்.சென்ராஜ் நாயுடு மற்றும் அனைத்து மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர் மணப்பந்தல் எஸ்.கே.ஆர் பாஸ்கர், இந்து கவரா நாயுடு அறக்கட்டளை நிறுவனர் பொம்மை ரவிச்சந்திரன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

இவ்விழாவிற்கு ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் மண்டல தலைவர் எவர்கிரீன் ஜி.வி பாலமுருகன், விஜயநகர பேரரசு வரலாற்று மீட்பு குழு பொருளாளர் ரெங்கராஜ், மதுரை நாயக்கர் வம்சம் நிறுவனர் ஜே.பி நாயுடு, அகில இந்திய தெலுங்கு சம்மேளன மதுரை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்மா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தன ர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க பொதுச் செயலாளர் போஸ் நாயுடு மற்றும் அனந்தராமன், கிருஷ்ணராஜ், சிட்கோ சீனிவாசன், சபாஷ் நாயுடு, முத்துராஜா, தங்கப்பாண்டி, பாலகிருஷ்ணன், பிரபு நாயுடு, ஜெகநாதன், பீரோ.செந்தில், வீரராஜ், ராதாகிருஷ்ணன், ஹேமா நாயுடு, சுந்தரேஸ்வரி, தத்து.பெருமாள், பழனி பத்மநாபன், பாஞ்சாலங்குறிச்சி மல்லுச்சாமி நாயக்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் கட்டபொம்மன் பேரவை இளைஞர் அணி செயலாளர் உன்னிப்பட்டி நவநீதகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் மோசடி…

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES