Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் இழுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!

மதுரையில் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் இழுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!

ராகுல் காந்தி எம்.பி யின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை செல்லூர் அய்யனார் கோயில் அருகில் உள்ள வி.என்.ஆர் நீதிராஜாராம் கொடிக்கம்பத்தில் கொடியேற்றி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதனை தொடர்ந்து மாலை கோரிப்பாளையம் பள்ளிவாசலில் துவா செய்யப்பட்டு ஏழைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் மீர்பாஷா தலைமை வகித்தார்.

பின்னர் காந்தி மியூசியம் அருகே உள்ள பூங்கா முருகன் கோவிலில் ராகுல் காந்தி நீடூடி வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்து தங்கத்தேர் இழுக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு கே.ஆர்.சுரேஷ் பாபு எஸ் என் பாலாஜி தலைமை வகித்தார். இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து மேல ஆவணி மூல வீதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு நாஞ்சில் பால் ஜோசப்,
பூக்கடை கண்ணன், மீனாட்சி சுந்தரம், ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரவாஞ்சிநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் மூவேந்திரன், எம்.போஸ், தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.என் பாலாஜி இப்படை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES