Thursday , December 18 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் ஆலாத்தூரில் நேயா டிரஸ்ட் அலுவலகம் திறப்பு விழா..!
NKBB Technologies

மதுரை மாவட்டம் ஆலாத்தூரில் நேயா டிரஸ்ட் அலுவலகம் திறப்பு விழா..!

மதுரை மாவட்டம் ஆலாத்தூரில் நேயா டிரஸ்ட் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மடீட்சியா செயலாளர் கோடீஸ்வரன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

ஆலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ராஜவேல் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். நேயா டிரஸ்ட் நிறுவனர் அமுதா சதீஸ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மடீட்சியா துணைத் தலைவர் அசோக் மரக்கன்றுகளை வழங்கினார்.தமிழ்நாடு மெர்க்ககன்டைல் வங்கியின் ஓய்வு பெற்ற மதுரை முதுநிலை மேலாளர் அய்யம்பெருமாள், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் பழனிக்குமார் ஆகியோர் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்புக்,பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினர்.

ஓய்வு பெற்ற டிஎஸ்பி கோபாலகிருஷ்ணன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். எல்.ஐ.சி ஏஜென்ட் பரமசிவம், டி.எம். புட்ஸ் நிறுவனர் சரவணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.

நிகழ்ச்சியின் முடிவில் சுபம் கோல்டு பைனான்ஸ் ஹேமா முத்துப்பாண்டி நன்றி கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES