Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / பழங்குடி சமூகத்தின் அர்ப்பணிப்புள்ள அரசியலையும் பழங்குடியினரின் குரல்களின் முக்கியத்துவத்தையும், அடிப்படை உரிமைகளுக்கான அவர்களின் போராட்டத்தையும், அவர்களின் வாழ்வில் வளர்ச்சி மற்றும் முயற்சிகளின் விளைவுகளையும் காண எங்களுடன் சேருங்கள் – மேராகர் சங்கம்

பழங்குடி சமூகத்தின் அர்ப்பணிப்புள்ள அரசியலையும் பழங்குடியினரின் குரல்களின் முக்கியத்துவத்தையும், அடிப்படை உரிமைகளுக்கான அவர்களின் போராட்டத்தையும், அவர்களின் வாழ்வில் வளர்ச்சி மற்றும் முயற்சிகளின் விளைவுகளையும் காண எங்களுடன் சேருங்கள் – மேராகர் சங்கம்

கல்வராயன் மலை வனப்பகுதிகளில் உள்ள பழங்குடி சமூகங்கள் இன்னும் தேசிய அரங்கில் புறக்கணிக்கப்பட்டதாக உணர்கின்றனர். அவர்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்கேற்க விரும்புகிறார்கள். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவின் சமூக மற்றும் கலாச்சார பன்முக இதயத்துடன் இப்பகுதியை வளப்படுத்த வேண்டும். இதனைபுரிந்துகொள்வதற்கான ஒரு சாளரமாக இந்தப் பகுதி செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கோமுகி அணை, கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை வட்டத்தில், கச்சிராபாளையம் என்னும் ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஓர் அணையாகும். தமிழ்நாட்டின் ஆதாரமாகப் புகழ் பெற்ற இந்தப் பகுதிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

மலைவாழ் சொந்தங்கள் அனைவரும் நம்மை அன்புடன் அழைக்கிறார்கள். கல்வராயன் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம், தமது பாரம்பரிய மரபுகளாலான பழங்குடி சமூகத்தின் அர்ப்பணிப்புள்ள அரசியலையும் பழங்குடியினரின் குரல்களின் முக்கியத்துவத்தையும், அடிப்படை உரிமைகளுக்கான அவர்களின் போராட்டத்தையும், அவர்களின் வாழ்வில் வளர்ச்சி மற்றும் முயற்சிகளின் விளைவுகளையும் காண எங்களுடன் சேருங்கள்.

அன்னை இந்திரா காந்தி அவர்கள் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருக்கும் போது, இந்தப் பழங்குடியின மக்கள் நிர்வாணமாக இயற்கையாக சுற்றித் திரிவதைப் பார்த்து, உடனடியாக அந்தப் பகுதிக்கு கலெக்டரை வரவழைத்து, உடனடியாக அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை சரி செய்திடவும் அவர்களும் சகஜமாக வாழ்வதற்கு ஒரு நல்வழியினை ஏற்பாடு செய்தார். இது சுதந்திர இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகும்.

இப்போது அங்கே என்ன நடக்கிறது என்பதனை நீங்கள் மேராகர் சங்கத்தின் மூலம் அங்குள்ள மக்களுடன் சென்று, இரண்டு நாள்கள் தங்கி பழகும்போது நேரிலே உணருங்கள்!

வாய்ப்பிற்கு முன்பதிவு செய்யுங்கள்
நிகழ்ச்சித் தேதிகள்:
2024 ஆகஸ்ட் 14 மற்றும் 15 ( இரண்டு நாள்கள்
அதிகபட்சம்: 50 நபர்கள் + 50 நபர்கள் தமிழ்நாடு + புதுச்சேரி (மொத்தம் 100 நபர்கள் மட்டும்)

தொடர்புக்கு அழைக்கவும்:
திரு S. சசிகுமார் – மாநில தலைவர்,
ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் – தமிழ்நாடு
9025282669

திரு.S.அமுதரசன் – மாநில தலைவர்
ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் – புதுச்சேரி
9894744615

மேலும் தகவலுக்கு
கடலூர் க. ரமேஷ் – தேசிய ஒருங்கிணைப்பாளர் RGPRS
9443136862

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES