Monday , June 9 2025
Breaking News
Home / இந்தியா / முழு நாடும் உங்களுடன் நிற்கிறது: வினேஷ் போகத்துக்கு ராகுல் ஆறுதல்

முழு நாடும் உங்களுடன் நிற்கிறது: வினேஷ் போகத்துக்கு ராகுல் ஆறுதல்

முழு நாடும் உங்களுடன் நிற்கிறது: வினேஷ் போகத்துக்கு ராகுல் ஆறுதல்

புது தில்லி: முழு நாடும் உங்களுடன் நிற்கிறது என்று இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறியிருக்கிறார்.

பாரீஸ் ஒலிம்பிக், மகளிருக்கான மல்யுத்தப் போட்டியல், 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் அமைப்பு அறிவித்தது.

50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட வேண்டிய வீராங்கனை, கூடுதலாக 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்திருந்தது இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தனது ஆதரவை அளிக்கும் வகையில், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், உலக சாம்பியன்களான மல்யுத்த வீராங்கனைகளை தோற்கடித்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று நாட்டுக்கு பெருமைசேர்த்த நிலையில், அவர் சில காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

ஒலிம்பிக் அமைப்பின் இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மனம் தளரக்கூடியவர் அல்ல என்பது தெரியும், அவர் இன்னும் வலுவாக களம் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

வினேஷ் போகத், நீங்கள் எப்போதும் நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். இன்றும் உங்கள் பலமாக முழு நாடும் உங்களுடன் நிற்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் மகளிருக்கான மல்யுத்தப் போட்டி 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் வருத்தத்தை அளிக்கிறது, இரவு முழுவதும் இந்தியக் குழுவினர் எடுத்த கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும், இன்று காலை 50 கிலோவுக்கும் கூடுதலாக சில கிராம் எடை கூடியிருக்கிறது. இது குறித்து இந்திய குழு வேறு எந்த கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளவில்லை. வினேஷ் போகத்தின் தனியுரிமையை மதிக்குமாறு இந்திய குழு கேட்டுக்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES