ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி:
தமிழ்நாடு இளைஞர் கட்சி யினர் இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக துணை முதல்வர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து இளைஞர் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதே கோரிக்கையை அதிமுக எம்எல்ஏ திரு. மாணிக்கம் அவர்கள் சட்டப்பேரவையில் நேற்று கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. உடனடியாக ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கை விரைந்து நடவடிக்கை எடுத்து & ரத்து செய்த தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு வெற்றியையும் கொண்டாடி வருகின்றனர்.

இளைஞர் குரல் சார்பாக தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ஜல்லிக்கட்டு போராளிகளின் சார்பாக….

