Tuesday , February 3 2026
Breaking News
Home / தமிழகம் / பழவேற்காடு மீனவர்களின் 13 ஆண்டு கால வாழ்வாதார பிரச்சனை…
NKBB Technologies

பழவேற்காடு மீனவர்களின் 13 ஆண்டு கால வாழ்வாதார பிரச்சனை…

பழவேற்காடு மீனவர்களின் 13 ஆண்டு கால வாழ்வாதார பிரச்சனையான காட்டுப்பள்ளி L&T கப்பல் கட்டும் துறைமுகத்தில் பணியாற்றும் 250 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்றும் இதுவரை உயர்த்தப்படாமல் உள்ள ஊதிய உயர்வு வேண்டியும், 2008ஆம் ஆண்டு அறிவித்த 2000 வேலை வாய்ப்பில் மீதம் உள்ள 1750 வேலையையும் மீண்டும் சுற்றி உள்ள பகுதிகளில் பணி வழங்கவேண்டும் எனவும் அனைத்து மீனவ கிராமங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்ட செய்தி அறிந்து ஜுலை 27 அன்று ஆர்.டி.ஓ தலைமையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் TJ Govindarajan, #நம்ம MLA Thiruvottiyur K.P. Shankar, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் Durai Chandrasekhar MLA, தாசில்தார், காவல்துறை உயர்அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை ஏற்று போராட்ட முடிவை நிறுத்திவைத்தனர். அதனை தொடர்ந்து பழவேற்காடு அனைத்து மீனவ கிராம பிரதிநிதிகளுடன் தொழில் துறை அமைச்சர் அண்ணன் Thangam Thenarasu தொழிலாளர் நலன்திறன் அமைச்சர் அண்ணன் CV Ganesan ஆகியோரை சந்தித்து கோரிக்கை மணு அளித்தனர். நிச்சயம் 250 தொழிலாளர்களை ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் செய்யவும், மீதம் உள்ள வேலை வாய்ப்பில் படிப்படியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES