சென்னை: தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (07.08.2024) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திமுகழகம் சார்பில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கலைஞர் செயலாற்றிய திட்டங்களால் பயன்பெற்ற பல்வேறு தரப்பினரும் தங்கள் நன்றியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கலைஞரின் …
Read More »‘எனக்காக அழகான காலணிகளை அனுப்பியுள்ளீர்கள்’.. காலணி தைத்து அனுப்பிய தொழிலாளிக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!!
டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அழகிய காலணிகளை தைத்து அனுப்பிய தொழிலாளி ராம்சேட்டுக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார். கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா். இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 26ம் தேதி …
Read More »நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் திடீர் போராட்டத்தை நடத்தினர். ஆயுள் காப்பீடு மீதான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை திருப்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். ஒரு நபர் தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து …
Read More »முதல்வர் தலைமையில் தொடங்கியது மாநில திட்டக்குழுவின் 5வது கூட்டம்..
தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் 5வது கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசை பொருத்தவரையில் தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கான கொள்கைகளை வகுப்பது, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை நடத்துவது, திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதில் திட்டக்குழுவின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மாநில திட்ட குழுவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைவராக இருந்து வருகிறார். துணை தலைவராக பொருளாளர் ஜெயரஞ்சன் …
Read More »அதிர்ச்சி… கேரளாவில் மேலும் 4 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் உறுதி!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அதே குளத்தில் குளித்த மேலும் 4 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களில் ஒருவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறையினர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிளவரதலா பகுதியைச் சேர்ந்த அனீஷ் (26), பூதம்கோட்டைச் சேர்ந்த …
Read More »வயநாட்டில் 8-வது நாளாக மீட்புப்பணி: பலி எண்ணிக்கை 406 ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 406 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து 8வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.சுமார் …
Read More »சுகாதார மற்றும் ஆயுள் காப்பீடு சேவைகளுக்கான ஜிஎஸ்டி-யை தனது ‘மீட்பு பட்ஜெட்டில்’ உயர்த்தியுள்ளது மோடி அரசு. இந்த வசதிகளுக்கு இது பொது மக்களுக்கு அதிக செலவாகும்.
புது டெல்லி: மோடி அரசின் இந்த மீட்பை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்.
Read More »வங்கதேச விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் ராகுல் பங்கேற்பு!
வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்து வருகிறார். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்துவிட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்தார். அவரை நேரில் சந்தித்த …
Read More »வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கே.ராணி அவர்கள் இன்று (05.08.2024) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் ஒரு லட்சம் ரூபாய் நிதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்களிடம் வழங்கினார்கள். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெ.எம்.எச் அசன் மௌலானா அவர்களின் ஏற்பாட்டில் சேகரிக்கப்பட்ட …
Read More »அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என்று திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக கட்சித் தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செய்த எண்ணற்ற சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். கருணாநிதியின் நினைவினைப் போற்றும் வகையில், ஆகஸ்ட் 7 அன்று சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலை அருகிலிருந்து, அவர் நிரந்தர …
Read More »