Tuesday , January 27 2026
Breaking News
Home / இந்தியா (page 8)

இந்தியா

India

“திரும்ப போராட வந்துட்டோம்… .” நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற 6 பெண் எம்பிக்களின் வைரல் பதிவு!

இந்தியாவில் நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உட்பட மற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது.3 வது முறையாக மோடி ஜூன் 9ம் தேதி பதவியேற்றார்.18வது மக்களவை கூட்டத் தொடர் நேற்று காலையில் தொடங்கிய நிலையில் புதிய எம்.பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று …

Read More »

“எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கினால் மட்டுமே அரசுக்கு ஆதரவு” – ராகுல் காந்தி

புதுடெல்லி: ‘எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம்.’ என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், சபாநாயகர் பதவிக்கு யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்தால் தனிப்பட்ட முறையில் பாஜக சபாநாயகரை தேர்வு செய்தது. ஆனால் இம்முறை பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் …

Read More »

முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல்!

மக்களவை சபாநாயகர் பதவிக்கான வேட்பாளராக பாஜக எம்.பி., ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ தனது வேட்பாளராக ஓம் பிர்லாவை நிறுத்தியுள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ ஆகியோர் எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்து ஏற்பட ஆலோசனை நடத்தினர். ஆனால் உடன்பாடு எட்டப்படாததால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் வேட்பாளரை நிறுத்துகிறது. ஒம் பிர்லா பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்த நிலையில், இன்று வேட்புமனு …

Read More »

7-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்… கோவை விமான நிலையத்தில் தீவிர சோதனை

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதோடு நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன. பயணிகளின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அது வதந்தி என்பது தெரியவந்தது. இதனிடையே மீண்டும் மின்னஞ்சல் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு …

Read More »

நீட் தேர்வில் பிஜேபி எவ்வளவு முயற்சி செய்தாலும், மோசடி, ஊழல் மற்றும் கல்வி மாஃபியாவை ஊக்குவிக்கும் பொறுப்பில் இருந்து தப்ப முடியாது.

3 உண்மைகள் மற்றும் 3 கேள்விகளுக்கு – மோடி அரசு பதில் சொல்ல வேண்டும்! 1. உண்மை – தாள் கசிவுக்கு எதிரான சட்டம் அறிவிக்கப்படவில்லை, இது குறித்து கல்வி அமைச்சரிடம் செய்தியாளர் சந்திப்பில் கேட்டபோது, ​​இந்த சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த சட்டத்திற்கு 13 பிப்ரவரி 2024 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது, ஆனால் நேற்று இரவுதான் சட்டம் அறிவிக்கப்பட்டது. கேள்வி – மோடி அரசின் கல்வி …

Read More »

சட்டசபையில் இன்று விஸ்வரூபமாகும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள்- அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை!

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் இதர கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளனர். முன்னதாக கள்ளக்குறிச்சி சென்ற தமிழக அமைச்சர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டையே பதறவைத்துள்ளது கள்ளக்குறிச்சியின் மரண ஓலம். தமிழக அரசியல் கட்சித் …

Read More »

`அதிகரிக்கட்டும் பசுமை திருமணங்கள்’ பரிசாக மரக்கன்றுகள் வழங்கி அசத்தும் இளைஞர்!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமி என்ற இளைஞர், யார் கேட்டாலும் அவர்களின் இல்ல சுபநிகழ்வுகளில் மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். தனது வருமானத்தில் பெரும்பகுதியை செலவிட்டு, தன்னுடைய ஊரில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். பொதுவாக இயற்கை மீது காதல் கொண்டவர்கள் தங்கள் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு வருகை தரும் சுற்றத்தாருக்கு பரிசுப் பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை கிஃப்டாக வழங்குவார்கள். ஆனால், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் …

Read More »

தமிழ் பாரம்பரிய மருத்துவர் – பேராசிரியர் Dr.G.தமிழழகன்

தமிழ் பாரம்பரிய மருத்துவர்:36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இயற்கை மருத்துவ சிகிச்சையாளர் மற்றும் பயிற்சி உடல்நலம் & வாழும் கலை அறிவியல்: பெண்களுக்கு பக்க விளைவு இல்லாமல் சிகிச்சை அளிக்கும் நோய்களின் விவரம்: பெண்மையின் பிரதிபலிப்பாக இருக்கும் 28 நாள் மாதவிடாய் சுழற்சி சரியின்மை, முன்பின் வலிகள், உடல் மனரீதியான மாற்றங்கள், அதிக அல்லது குறைவான உதிரப்போக்கு, மாதம் இருமுறை வருதல் அல்லது சில மாதங்கள் தாமதித்து வருதல், உடல் …

Read More »

கணக்கில் வந்தது 6000 கோடி – விண்ணைத் தாண்டும் கணக்கில் வராத பணம் : மோடி அரசின் ஊழல் கணக்கு வெளிப்பட்டது!

தனது சொந்த கட்சிக்காககவும், கட்சியின் அதிகாரத்துவத்தினை செயல்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் மோடி. அவ்வாறு அவர் தலைமையில், 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 2018 முதல் அமலுக்க வந்த தேர்தல் பத்திரம் முறை, சட்டப்படி எவ்வாறு ஊழல் செய்வது என்பதை உலக அரங்கிற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.2014 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட எண்ணற்ற நடவடிக்கைகளால், ஏழை மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட பணங்கள், …

Read More »

“விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் பாஜக” : மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!

ED,IT,CBI உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிய பாசிச பா.ஜ.க மிரட்டி வருகிறது. மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ.கவில் இணையவைப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பா.ஜ.கவில் இணைந்துவிட்டால் அவர்களது ஊழல் வழக்குகள் காணாமல் போய்விடுகிறது. அப்படி இல்லை என்றால் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இந்நிலையில் 10 ஆண்டுகால மோடி ஆட்சியில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES