
இந்நிகழ்வில் பூமிராஜா, நாகேந்திரன், குணா அலி, அழகர், கரிசல்குளம் முருகன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை பாத்திமா நகரில் உள்ள தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நடிகர் சங்க பொதுச் செயலாளர் சி.எம்.வினோத் துணை நடிகர்கள் அனைவருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
இவ்விழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், பன்னீர்செல்வம், மணி, பாலா, ராணி, வாசுகி, சுமதி, பாண்டிச்செல்வி, மஞ்சு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
சிவகங்கை மாவட்டம் எமனேஸ்வரம் ஈஸ்வர விலாஸ் ஆரம்பப் பள்ளியில் ROYAL SOUCO சவுராஷ்டிரா கல்லூரியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஏழை,எளிய பள்ளி குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா ROYAL SOUCO ஸ்தாபகர் & தலைவர் கே.என்.கே ரகுநாத் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு உப தலைவர் சாந்தமூர்த்தி முன்னிலை வகித்தார். ஸ்தாபகர் & செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலருமான ஆர்.கே.பாலயோகி வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் டாக்டர் டி என் குப்புசாமி சந்திரசேகரன் எமனேஸ்வரம் சௌராஷ்ட்ரா சபைத் தலைவர் சேஷய்யர், சேனாதி பிலேந்திரன், மாருதிராஜன், சுஜாதா,விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் அருகே ஆப்பிள் மெட்ரோ ஷாப்பிங் திறப்பு விழா நடைபெற்றது.
பயாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு வருகை தந்தவர்களை உரிமையாளர் பாரூக் வரவேற்றார். இவ்விழாவில் ஷாஜகான் உள்பட குடும்பத்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பாரூக் நம்மிடம் கூறுகையில்:-
1000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் பிளாஸ்டிக் வாளி இலவசம், 2000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் சில்வர் சம்படம் இலவசம், 3000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் பெரிய சில்வர் சம்படம் இலவசம்.
முதல் மற்றும் 2-வது கிளை கே.புதூர் பகுதியிலும், 3-வது கிளை அண்ணாநகரிலும், 4 வது கிளை காளவாசலிலும் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி தலைமையில், மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் முன்னிலையில், வழக்கறிஞர் கார்த்திகேயா 500 பேருடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
இந்நிகழ்வின் போது மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்திரன் உடன் இருந்தார்.
அதிமுக 51 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் 51 வது வட்டக்கழக செயலாளர் முனிச்சாலை சரவணன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது .
இவ்விழாவில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா ஏழை.எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் முட்டை பிரியாணி வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் பா.குமார், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் எம்.எஸ்.கே மல்லன், தெற்கு 1.ம் பகுதி செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் முருகன், தர்மராஜ், நாகரத்தினம், மகேந்திரன், வேங்கையன், கண்ணன் மிட்டாய் பிரகாஷ், குணசேகரன், கமல், சாக்கு செல்வம், ரகுல், முத்து, மரக்கடை கணேசன், வேணுகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நம் நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டதினால் வறுமையில் இருந்து மீள்வதற்காக வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு தேடிச் செல்வோர் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.
இப்படி செல்வோரில் சிலர் மோசமான நபர்களிடம் சிக்கி பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவது வழக்கமாகி வருகிறது. அப்படியோரு மோசமான கும்பலிடம் சிக்கி மீண்டு வந்த இளைஞரைப் பற்றிய தகவலே இது.
சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் எனும் இளைஞர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் மூலம் மலேசிய நாட்டில் வேலைக்கென சென்றார். இதற்காக ரூ.80,000 முகவர்களிடம் வழங்கியிருந்தார். அங்கு சென்றவருக்கு சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் ஒரு அடுக்கு மாடிக்கட்டிடத்தில் வேலை வழங்கப்பட்டது. முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் மாவு போன்றதொரு பொருளை வழங்கி அவை மருந்தெனக் கூறி அவற்றை ஒரு கிராம் எடை கொண்ட சிறு பொதிகளாக்கும் வேலை வழங்கப்பட்டது. சந்தேகம் கொண்ட ஆனந்த் ரகசியமான முறையில் தகவலை சிவகங்கையில் வசித்து வரும் தனது உறவினருக்கு தெரிவித்தார். அவர் இத்தகவலை சிவகங்கை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் அவர்களிடம் நடந்தவற்றைக் கூறினார்.
நடந்தவற்றை முழுமையாகக் கேட்டறிந்த அவர் மீண்டும் பல்வேறு வழிகளில் ஆனந்தை மீட்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டார். பின்னர் தமது நிறுவனத்தின் சிங்கப்பூர் நாட்டிற்கான தலைவர் முனைவர். மணிவண்ணன் நாச்சியப்பன் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு மலேசியக் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு ஆனந்தை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் மூலம் ஆனந்த் மீட்கப்பட்டார். அங்கிருந்த 5 கிலோ மற்றும் 160 கிராம் எடையிலான ஹெரோயின் போதைப் பொருளும் 175 கிராம் மெத்தபெத்தமின் ரக போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மலேசியக் காவல்துறையினர், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர்.நீலமேகம் நிமலன் அவர்களிடம் ஆனந்த் மீட்கப்படுவதற்கு முன்னர் வழங்கியிருந்த வாக்குறுதியை மீறி ஆனந்தை இவ்வழக்கின் சாட்சியாக உருவாக்கி வீட்டுக் காவலில் வைத்தனர்.
இரண்டு வருடங்களாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் பின்னர் ஆனந்த கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அவருடைய சொந்த ஊர் வந்து சேர்ந்தார்.
வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு தேடிச் செல்லும் போது அரசினால் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களினூடாக செல்வது முக்கியமானதாகும்.