நேற்று திண்டுக்கல்லில் மாற்றுக் கட்சியினர் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் இணைந்தனர்…
நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்று கட்சியினர் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் மாவட்ட தலைவர் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டதுடன்மாநில துணைச் செயலாளர் திரு முகமது அலி மற்றும் மாநில பத்திரிக்கைத்துறை தொடர்பாளர் திரு பாலமுருகன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு ரஞ்சித் குமார் அவர்கள் மேலும் இதுபோன்ற சந்திப்புகள் தொடரும் தொடரும் எனவும் இளைஞர்களின் சக்தி அரசியலில் மாற்றத்தை உருவாக்க திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி செயல்படும் எனவும் தெரிவித்தார்.
அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு ஓர் எளிமையான காவல் ஆய்வாளர்….
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளர் திரு ஈஸ்வரன் அவர்கள் டிவிஎஸ் 50 யில் இன்று பயணித்த போது பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு மகிழ்ச்சியாகவும் இருந்தனர். மேலும் காவல் ஆய்வாளர் மற்றும் அனைத்து காவல் துறையினரும் நன்றாக பணியாற்றி அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு நற்பெயர் வாங்கி தந்து கொண்டிருக்கின்றனர். அனைத்து காவலர்களுக்கும் இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு இளைஞர் கட்சி அளித்த மனுவிற்காக சட்டமன்றத்தில் MLA மாணிக்கம் வாயிலாக பேசிய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி…#jalliakttu#protest#cases
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் திரு. ஒ.பன்னீர் செல்வம்அவர்களுக்கு,பொருள் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது போடப்பட்ட கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெறவேண்டிமதிப்பிற்குரிய ஐயா இந்த மனு மூலம் தங்களிடம் வேண்டிக் கொள்வது யாதெனில், தமிழ்நாட்டில் பண்டைய காலம் தொட்டு நடைபெற்றுவந்த தமிழனின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை ஒருசில முதலாளித்துவம் மிக்க அதிகார வர்க்கத்திற்கு உட்பட்டவர்கள் பீட்டா அமைப்பின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக உயிர் பலிகள் ஏற்படுவதாகவும் கூறி 2012 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வீர விளையாட்டை நடைபெற விடாமல் தடை செய்து வைத்திருந்தனர். இதனால், இவர்கள் மறைமுகமாக கார்ப்பரேட் வர்த்தகத்தை பெருக்க நினைத்து நம்முடைய நாட்டு இன மாடுகளை அழிக்க நினைத்தனர். இந்தச் சூழ்நிலையில் தமிழர்களின் கலாச்சார விளையாட்டை விளையாடுவது குறித்தும் நம் நாட்டு இன மாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் ஏற்பட்ட ஒரு அமைதிப் புரட்சியே இந்த ஜல்லிக்கட்டு போராட்டம். இந்தப் போராட்டமானது மிகவும் அமைதியான முறையிலும் ஒழுக்கமான முறையிலும் எந்தவித அரசியல் கட்சி தலையீடும் இல்லாமல் இளைஞர்களின் எழுச்சியால் முழுக்க முழுக்க தமிழகம் முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் சுய ஒழுக்கத்துடன் நடைபெற்று அந்தப் போராட்டம் வெற்றியும் பெற்றது அவ்வாறு வெற்றி பெற்ற அந்தப் போராட்டத்தில் சில பல வன்முறைகள் வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்ட அதில் அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டதோடு அதில் ஒழுக்கத்துடனும் கண்ணியத்துடன் நடந்து கொண்ட மக்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டு இன்றளவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கானது இன்றளவும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் மன உளைச்சலையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே, இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் எந்த ஒரு நிபந்தனையும் விசாரணையுமின்றி திரும்பப் பெறுமாறு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்கின்றோம்.குறிப்பு: இதே மனுவை துணை முதல்வர் திரு. ஒ.பன்னீர் செல்வம் அவர்களை நேற்று (03/02/2021) சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளோம் என்று தமிழ்நாடு இளைஞர் கட்சி யினர் தெரிவித்தனர்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒன்று கூடி.. 234 தொகுதிகளிலும் இனி தனியே மக்களை நாடி.. ஒரே மேடையில் 100 வேட்பாளர்களை அறிமுகம் செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி
வருகின்ற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழ்நாடு இளைஞர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதால் அதன் முதற்கட்டமாக ஒரே மேடையில் 100 வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது.
ஜல்லிக்கட்டு புரட்சியில் உதயமான தமிழ்நாடு இளைஞர் கட்சி இன்று 5 ஆம் வருட துவக்க விழாவை கொண்டாடுகிறது. இந்த விழாவில் ஜல்லிக்கட்டு புரட்சியின் 5 ஆம் வருட வெற்றியை அடையாள படுத்தும் விதமாக ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர் சிலையை மாநில தலைவர், பொது செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் இணைந்து திறந்து வைத்தனர். இந்த அடையாள சின்னமானது தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு வெற்றி உலாவாக கொண்டு செல்ல உள்ளோம். ஏற்கனவே R. k.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டதோடு, 2019 பாராளுமன்ற தேர்தலிலும் 16 இடங்களில் மோதிர சின்னத்தில் போட்டியிட்டோம், தற்போது அதே மோதிர சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாடு இளைஞர் கட்சி கடந்த அக்டோபர் மாதம் இளைஞர்களின் வழிகாட்டி திரு அப்துல் கலாம் அய்யா அவர்களின் பிறந்தநாள் அன்று வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியில், துடிப்பான , திறமையான இளைஞர்களை கொண்டு தனித்து போட்டியிடுவோம் என்று ஊடகத்தின் வாயிலாக மக்களுக்கு வெளிப்படுத்தி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக முதற்கட்டமாக 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 100 வேட்பாளர்களை இன்று ஒரே மேடையில் அறிமுக படுத்தியது. இது இன்றைய அரசியல் சூழலில் தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சியும் செய்யவில்லை என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறோம். மீதி உள்ள வேட்பாளர்களையும் விரைவில் அறிப்போம்.
இந்த நிகழ்வில் திரு பழ கருப்பையா அவர்களும், பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி , நடிகர் ராஜ சிம்மா , மற்றும் கையெழுத்து இயக்கம் தோழர்களும் கலந்து கொண்டனர். மேலும் பாமக மாவட்ட பொறுப்பு மற்றும் இளைஞர் அணியில் உள்ள நண்பர்கள், தமிழ்நாடு இளைஞர் கட்சியில் இணைந்தனர், அவர்களுடன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் கட்சியில் அவர்களை இணைத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதி வரை கலந்து கொண்ட நடிகர் திரு ராஜ சிம்மா அவர்கள் தான் செய்து வரும் சமூக சேவைகள் கூட மற்ற அரசியல் கட்சிகள் தலையீட்டால் தடுக்க படுகிறது என்று வேதனை தெரிவித்ததோடு, அரசியலில் நிச்சயம் மாற்றம் வரவேண்டும் என்றும் அது இந்த ஆளும், எதிர் கட்சிகளால் தர முடியாது என்று தெரிவித்தார். தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் பிடித்த காரணத்தால் தன்னை கட்சியில் இணைத்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பழ கருப்பையா ஊழலை ஒழிக்க இளைஞர் சக்தியால் மட்டுமே முடியும் என்று உறுதியாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், படித்த சமூகத்தில் படிக்காத தலைவர்கள் ஆட்சி செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை ஆட்சி செய்த கட்சியால், ஊழலை ஒழிக்க முடியவில்லை, முடியவும் முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். இது தெரிந்ததும் நல்ல தலைவர்கள் கொண்ட சிறு கட்சிகளும் அவர்களுடன் கூட்டணி செல்வது எந்த மாற்றத்தையும் தராது என்றும் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட காஞ்சிரம்பரம்பு கரையிலிருந்து கண்ணவிளை கருங்கல் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நிற்கும் வாகனம் இந்த வாகனத்தின் உரிமையாளரும் சுமிதா ஸ்டுடியோ உதயமார்த்தாண்டம் உரிமையாளருமான ரவியிடம் பலமுறை அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர் இதனை அவர் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர் அதுமட்டுமல்லாது கிராம பஞ்சாயத்துக்கு பலமுறை அப்பகுதி மக்கள் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் இருகின்றனர். செய்தியாளர் கிருஷ்ண மோகன் ஒளிப்பதிவாளர் ஜாக்சன் ஜெனோபட்
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு இன்றைக்கு நடைபெற்றது, அதில் 2020 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் ஆண், பெண் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
குறிப்பாக இன்றைக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் ஒரு கோடி ரூபாய் வரை வழக்குகளை தாக்கல் செய்யலாம் ஆனால் ஒருசில மாவட்டங்களில் தலைமை நீதிபதி இல்லாமல் காலியாக இருக்கின்றது அதேபோல் தமிழக அரசு ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியாக மாவட்டக் குறைதீர் ஆணையத்தில் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கும் இன்னும் பல்வேறு மாவட்டங்களில் அது அந்த பணி நடைபெறாமல் இருக்கின்றது அதேபோல் இன்றைக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆகவே அந்த பாதுகாப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன தீர்வுகளை இந்த சட்டத்தை கடுமையாக அமல் படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் அதேபோல் பரிசோதனைக்காக ஒருசில தனியார் மருத்துவமனையில் பரிசோதனை என்ற பெயரில் தவறான ஒரு அறிக்கை குறித்து மக்களிடையே ஒருவர் கிட்டே பணம் கொடுக்கக் கூடிய ஒரு சூழல் இருக்கிறது அது போன்ற தனியார் மருத்துவமனைகளையும் ஆய்வகங்களில் ஆய்வு செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்ற தமிழக அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
திருப்பூர் மாவட்டத்தில் மிக பெரிய அரசு மருத்துவமனை என்று தான் பெயர் ஆனால் அதில் எந்த ஒரு பயனும் இல்லை நாட்கள் நாள் மாதம் மாதம் வருடம் வருடம் மருத்துவமனை மீது அதிக குற்றங்கள் சொல்கின்றனர் போது மக்கள் பிரசவசம் என்றாலும் அவசர சிகிச்சை என்றாலும் மருத்துவரை பார்ப்பது மிக கடினம் போது நாட்களில். இப்போது கோரோனா நாட்களில் மருத்துவர்களே இருப்பது இல்லை அனைத்தும் செவிலியர்கள் பார்த்து கொள்கிறார்கள் பிரசம் என்றாலும் செவிலியர்கள் அவசர சிகிச்சை என்றாலும் செவிலியர்கள் தான் இருக்கிறார்கள் மருத்துவர்கள் இருப்பதே இல்லை .கொரோனா வைரஸ் தாக்கம், மருத்துவத்துறையில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. திருப்பூர் அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதேபோல, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அறிகுறி இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இதற்கிடையே, கட்டுமானப் பணியின்போது, மின் வொயர்கள் துண்டிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குச் செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஆக்ஸிஜன் வழங்குவதில் ஏற்பட்ட கோளாறால், அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இதை கண்டித்து தமிழ்நாட்டு இளைஞர் கட்சியினர் காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகளைைை நிரந்தரமாக மூடுவது குறித்தும் முழக்கமிட்டனர். இந்த இளைஞர்களின் கோஷம் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த இளைஞர்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அன்னம் அறக்கட்டளை தனது சேவையை தொடர்ந்து ஓராண்டு காலமாக சிறப்பான முறையில் சேவை செய்து இரண்டாம் ஆண்டிற்குள் அடி எடுத்து வைக்க உள்ளது .இந்த அருமையான தருணத்தை மக்களாகிய உங்களுடன் இணைந்து தனது சேவையை தொடர விரும்புகிறோம். அன்னம் அறக்கட்டளையின் நமக்குநாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி காவல்துறை மற்றும் அன்னம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நமக்கு நாமே விழிப்புணர்வு முக்கிய சந்திப்புகளில் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நடத்தப்பட்டது இதற்கு நமது அன்னம் அறக்கட்டளை சார்பாக ஒத்துழைத்த அனைத்து காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு எங்கள் அன்னம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் உள்ளன. இங்கு அரவக்குறிச்சி, பள்ளபட்டி ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. சுமாராக 50% மேல் பெண்கள் அரவக்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர். தாலுகா தலைமையிடமான அரவக்குறிச்சி சுமாராக 40 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால் இங்கு ஒரு மகளிர் காவல் நிலையம் கூட இல்லை.
பெண்கள் புகார் கொடுக்க அரவக்குறிச்சி பகுதியில் இருந்து 40 கி.மீ தூரமுள்ள கரூர் காவல் நிலையத்திற்குத்தான் செல்ல வேண்டிய சிரமமான நிலை உள்ளது. அரவக்குறிச்சியில் மகளிர் காவல் நிலையம் அமைக்க உயர் அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அரவக்குறிச்சியில் காவல் நிலையம் அமைக்கவேண்டி தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில், கரூர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகம் கடந்த ஒரு சில மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் மேற்கண்ட மனுவில் தெரிவித்துள்ளதாகக் கூறினர்.
டீ விற்கும் இளைஞன் சைக்கிள் வாங்கிக் கொடுத்த உண்மைக்கதை ஏழைப் பெண்ணுக்கு…..
சென்னை சோழிங்கநல்லூர், காந்தி நகர், எரிக்கரை பகுதியில் வசித்து வரும் சூரிய கலா என்ற பெண் என்னிடம் உதவி கேட்டிருந்தார்.கணவர் பிரிந்து சென்று விட்டதாகவும் இரண்டு குழந்தைகளுடன் 1200 ரூபாய் வாடகை வீட்டில் இருக்கிறேன், வீட்டு வேலை செய்து வந்தேன், இப்போது வேலை இல்லை. ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். ஜாக்கெட் தைக்க நன்கு தெரியும் என்று தெரிவித்தார். ஏற்கனவே, இந்த பெண்மணியின் பெற்றோரை அறிவேன். சிந்தாதிரிப்பேட்டையில் வசித்தவர்கள்.மிக மிக ஏழ்மையான குடும்பம். ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்தால் கண்டிப்பாக இக் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்று முடிவு செய்து என் நண்பர்கள் மற்றும் தொண்டு உள்ளங்கள் நிறைந்த வாட்ஸ்அப் குழுக்களுக்கு இந்த தகவலை பகிர்ந்தேன். நான் பகிர்ந்தவுடன் மதுரையில் வசிக்கும் ஒரு அன்பரிடம் இருந்து போன் வந்தது .நீங்கள் குறிப்பிட்ட குடும்பம் உதவுவதற்கான தகுதி படைத்தவர்களா ?என்று அந்த தொலைபேசியில் பேசியவர் கேட்டார். உடனே நான் 100% தகுதியான குடும்பம் என்றதும் ,தையல் மிஷின் எவ்வளவு என்ற விவரத்தை தெரிவிக்க சொன்னார். நான் சம்பந்தப்பட்ட கடையில் விசாரித்து பதினெட்டாயிரம் என்று தெரிவித்தேன். உடனடியாக, என்னுடைய வங்கி கணக்கு விவரங்களை அனுப்ப சொன்னார். நான் சொன்னேன், நீங்கள் அந்த தையல் மிஷினை விற்பனை செய்யும் கடைக்கே அனுப்பி விடுங்கள் என்று அந்த விவரத்தை கொடுத்தேன். அந்த கடைக்கு தொகையை அனுப்பியிருந்தார். நான் ஒரு குட்டி யானையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, 45 நாட்களுக்கு தேவையான மளிகைப் பொருள்களுடன் அந்த தையல் மிஷினுக்கு உடனடியாக தேவைப்படும் நூல்கள், பட்டன்கள், கொக்கிகளையும் வாங்கிக் கொண்டு சோளிங்கநல்லூர் சென்றேன். இவ்வளவு விரைவான உதவியை அவர்கள் எதிர்பார்க்க இல்லை. உடனடியாக அந்த மிஷினில் அப்பெண்மணியை உட்காரச் சொல்லி தைக்கச் சொல்லிவிட்டு, மதுரையிலுள்ள அந்த நண்பருக்கு வீடியோ காலில் தொடர்பு கொண்டு காண்பிக்க முற்பட்டேன். வீடியோ காலில் அவரைப் பார்த்ததும் மிரண்டு போனேன். ஒரு நடுத்தர வயது கொண்ட அதிகாரியாக அல்லது தொழிலதிபராக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அந்தப் பையனுக்கு சுமார் 25 வயதுதான் இருக்கும். டீ கேனுடன் கூடிய சைக்கிளுடன் நின்றிருந்தான். தெருத்தெருவாக சென்று டீ விற்கும் இளைஞன். அவனுக்கு பின்னால் துளாவி பார்த்தேன். அவனுடைய எஜமானர் யாரும் இருக்கிறார்களா! என்று தேடினேன். உதவி செய்தது …யார்? என்றேன். நான் தான் என்றான். எனக்கு தூக்கி வாரிப்போட்டது அதன் பிறகுதான் அவனுடைய முழு விவரம் தெரிய வந்தது. அவன் பெயர் தமிழரசன், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன். வேலை தேடி சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு, பசியின் கொடுமையை அறிந்து மீண்டும் மதுரைக்குச் சென்று சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வருவதும், தினந்தோறும் தன் வருமானத்தில் 20, 30 ஏழை மக்களுக்கு உணவுவாங்கிக் கொடுத்து பசிப்பிணி ஆற்றி மகத்தான சேவை புரிந்து வருவதையும் அறிந்தேன். அவன் செயல்பாட்டை பாராட்டும் வகையில் சமீபகாலமாக நிறைய பேர் அவனுக்கு உதவிக்கரம் நீட்ட முன் வந்ததுள்ளதாகவும் அந்த உதவிகளையும் இப்படி திருப்பிவிட்டு ஏழை எளிய மக்களுக்கு மேலும் நன்மைகள் செய்து வருவதையும் அறிந்து மெய்சிலிர்த்துப் போனேன்.!
இந்த செய்தி சோசியல் மீடியாவில் தீயை பரவிவருகிறது இதுபோல் உள்ள நல்லுள்ளம் கொண்ட கொடை வள்ளல்கள் அனைவருக்கும் உணர்ச்சி கலந்த நன்றியை இளைஞர் குரல் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.