Saturday , December 20 2025
Breaking News
Home / செய்திகள் (page 114)

செய்திகள்

All News

இந்திய பாஜக அரசே! உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு! பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு! – மே பதினேழு இயக்கம்

இந்திய பாஜக அரசே! உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு! பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு! – மே பதினேழு இயக்கம்

பார்ப்பனரல்லாத, பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட-பட்டியலின ஏழை-எளிய மாணவர்களின், தேசிய இன மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை, கடும் எதிர்ப்புகளைத் தாண்டி கொரோனா என்ற பேரிடர் காலத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்துள்ளது மக்கள் விரோத பாஜக அரசு. இன்னும் சொல்லப்போனால், புதிய கல்விக் கொள்கையானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் உள்ளது. பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கையின் பார்ப்பனத்துவ உருவமாக இந்த புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு, மக்களின்-கல்வியாளர்களின் எதிர்ப்புகளை மீறி அவசர அவசரமாக ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய ஒன்றியம் முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம்; 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு, கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்துவிதமான உயர்கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வு; மும்மொழித் திட்டத்தின் மூலம் சமஸ்கிருத-இந்தி திணிப்பு; பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி என்கிற பெயரில் குலக்கல்வி திட்டத்தை நுழைத்தல்; யூ.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்க் கல்வி நிறுவனங்களுக்குப் பதிலாக மையப்படுத்தப்பட்ட ஒற்றை நிறுவனத்துக்கு கீழ் அனைத்து துறைகளையும் (மருத்துவம், சட்டம் தவிர்த்து) கொண்டுவருதல்; அனைத்து கல்லூரிகளுக்கும் தன்னாட்சி வழங்குதல் என்று பட்டியல் நீள்கிறது.

இருமொழிக் கொள்கை உடைய தமிழ்நாடு தான் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் 49% உடன் முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய ஒன்றியத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 26% தான். அதனை 50% ஆக மாற்ற வேண்டும் என்பது இந்திய அரசின் இலக்கு. அதனை தனி மாநிலமாக கிட்டத்தட்ட அடைந்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது தமிழ்நாடு. அப்படியான நோக்கம் உண்மையென்றால், இந்தியா தமிழ்நாட்டின் சமூகநீதிக்கான கல்விக்கொள்கையை தான் பின்பற்ற வேண்டும். குடிமக்கள் மீது அக்கறை இல்லாத இந்திய அரசோ தோற்றுப்போன மும்மொழிக் கொள்கையினை தமிழகம் மாதிரியான முன்னோடி மாநிலத்தின் தலையில் கட்டப்பார்க்கிறது. இந்திய அரசுக்கு குடிமக்களின் கல்வி அறிவை மேம்படுத்துவது எல்லாம் நோக்கம் கிடையாது என்பதற்கு ஒரு சிறிய சான்று தான் இந்த புள்ளிவிவரம்.

கல்வியில் ஒற்றைத்தன்மையை கொண்டுவந்து தேசிய இன மக்களின் வரலாற்றை, மொழியினை, பண்பாட்டினை இல்லாமல் செய்வது, நுழைவுத்தேர்வு மட்டுமே அடிப்படையாக வைத்து கல்வி அமைப்பை வடிவமைப்பது, மாநிலங்களின் உரிமையை மொத்தமாக பறிப்பது, உலக வர்த்தகக் கழகத்தின் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தனியாருக்கு கல்வியினை தாரை வார்ப்பது என்பதை மட்டுமே மொத்த நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே நுழைவுத்தேர்வு என்று அதிகாரத்தை மையப்படுத்தி மாநிலங்களுக்கு ஒரு மாவட்டத்திற்கு அதன் நிலத்தின் மீது இருக்கும் உரிமையை விட பலவீனமான அதிகாரத்தை வழங்கும் முனைப்பிலேயே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்து-இந்தி-இந்து ராஷ்டிரம் என்பதை நோக்கியே ஒவ்வொரு காயையும் நகர்த்தி வருகிறது ஆளும் பாஜக அரசு.

புதிய கல்விக் கொள்கை மட்டுமல்லாது, இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி, சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு மக்கள் கருத்தை கேட்டறியத் தேவையில்லை என்ற மசோதாவையும், தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய 12 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை தர மறுப்பதும், விவசாயதிற்கான இலவச மின்சாரத்தை தடை செய்வதும், நியாயவிலைக் கடைகளில் விலையில்லா பொருட்கள் வழங்க தடை செய்வதும் என பல்வேறு திட்டங்களை மக்கள் எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றி ஒன்றிய அரசு வருகிறது. கொரோனா காலத்தில் மக்கள் போராட முன்வரமாட்டார்கள், மக்கள் ஜனநாயகப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்யும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க தேவையில்லை போன்ற காரணங்களினால் அவசர அவசரமாக இந்த மக்கள் விரோத திட்டங்களை, சட்டங்களை அரசு நிறைவேற்றுகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டிவிட்டது. தொற்றைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார இழப்புகளைத் தடுக்கவும் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் தற்போதுவரை செயல்படுத்தாத இந்திய அரசு, மக்கள் விரோத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மட்டும் தீவிரம் காட்டி வருகிறது. இதனை மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர்கள் வீதிக்கு வந்து போராடி இந்தியாவையே உற்றுப் பார்க்க வைத்த வரலாறு தமிழ்நாட்டிற்கு இருக்கிறது என்பதை பாஜக அரசு மறந்துவிடக் கூடாது!

இந்திய அரசே! மக்கள் விரோத புதிய கல்விக் கொள்கையினை உடனடியாகத் திரும்பப்பெறு. கல்வியினை மாநிலப் பட்டியலுக்கே மாற்றிடு! ஊரடங்கு காலத்தில் மக்கள் விரோத சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்திடு! தமிழக அரசே! இருமொழிக் கொள்கையை அரசின் கொள்கை முடிவாக இருக்கும் நிலையில்,மும்மொழிக் கொள்கை மூலம் மறைமுகமாக இந்தியை திணிக்கும் புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டிற்கு எதிரானது என உடனடியாக பகிரங்கமாக அறிவி! அமைச்சரவையை கூட்டி, எந்த நிலையிலும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்று தீர்மானம் நிறைவேற்று! ஒன்றிய அரசின் மக்கள் விரோத திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்காது உடனடியாக எதிர்ப்பினை பதிவு செய்!

மே பதினேழு இயக்கம்
9884072010

கரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.

குளித்தலை புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்துவரும் தமிழக அரசுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கும் கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்கும் என்றும், ஒரு சில தனிநபர்களும் அரசியல்வாதிகளும் பேருந்து நிலையம் வர கூடாது என சில குழப்ப செயல்களை செய்து கொண்டுள்ளார்கள் என்றும் எனவே தமிழக அரசு விரைவாக பேருந்து நிலைய பணிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கப்பட்டது அதற்கு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தமிழக அரசின் முயற்சியில் கட்டாயம் குளித்தலைக்கு புதிய நவீன பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.

கொரோனா – வரமா, சாபமா

Nanda Third Eye

கொரோனா – வரமா, சாபமா

July 24, 2020

நம் மனித சமுதாயம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் நிகழ்வை தற்சமயம் சந்தித்துக் கொண்டுள்ளது. ஆம், கொரோனா என்ற ஒரு கொடிய நோய் உலக மக்கள் அனைவரையும் மிகவும் அச்சுறுத்திக்கொண்டுள்ளது. மாபெரும் பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ள முதற்கட்ட நாடுகள் முதல் உலகின் மூன்றாம் நிலை நாடுகள் வரை அனைத்தும் கண் பிதுங்கி நிலைகுலைந்து என்ன செய்வதென அறியாமல் திண்டாடிக்கொண்டுள்ளன.

இதுவரை நம் மனிதகுலம் கால வரையறையை BC, AD அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, கிறிஸ்துக்கு பின்பு என வரையறுத்தது. ஆனால் தற்போது அதே BC, AC என்ற காலக்குறியீடு கொரானாவுக்கு முன், கொரானாவுக்கு பின் என்ற மாற்றி அமைக்கப்படவேண்டிய அளவுக்கு இவ்வுலகம் கொரோனாவின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
 
எவ்வளவு பலம் பொருந்திய மனிதராயினும் பலமற்ற மனிதராயினும், எவ்வளவு புகழ் பெற்ற மனிதராயினும் சாதாரண மனிதராயினும், எவ்வளவு பொருள் படைத்த மனிதாராயினும் பொருளற்ற மனிதராயினும், எச்சாதி   மனிதராயினும், எம்மதத்தை சார்த்தவராயினும், எந்நாட்டை சார்ந்தவராயினும்,  எம்மொழி பேசுபவராயினும் கொரோனாவின் முன் அனைவரும் சமமே. சாதரணமாக நாம் அனைவரும் கடவுள் முன் சமமே என்று பலர்கூறக்கேட்டுள்ளோம், ஆனால் தற்போது கொரோனாவின் முன் அனைவரும் சமமே என்று கண்கூட கண்டுகொண்டோம். என்ன சாதி, என்ன மதம், என்ன மொழி, என்ன இனம், என்ன நாடு என்று பார்த்து வரவில்லை இந்த கொரோனா. அதற்கு தெரிந்திருக்கிறது நாம் அனைவரும் மனிதர்கள் என்று.
 
பல்லாயிரம் ஆண்டுகளாக இறைவனாலும் ஒன்று படுத்தமுடியாத, பல்வேறு கூறுகளாக பிரிந்துகிடந்த மனித சமுதாயத்தை ஒரு சில நாட்களில் மாதங்களில் மனிதர்களிடையே எவ்வித வேறுபாடுகளும் வித்தியாசங்களும் இல்லை நாம் அனைவரும் ஒன்று தான் என்ற எண்ணத்தை மிக ஆழமாக பதித்திருக்கிறது இந்த கொரோனா.
 
பொருளாதார முன்னேற்றம் மட்டுமே வாழ்க்கையின் வெற்றி என்ற அற்ப நம்பிக்கையில் உறவுகளின் உன்னதத்தை மறந்து, பெரியோரின் பண்புகளை மறந்து, படிப்பின் அடிப்படை நோக்கத்தை மறந்து, உற்ற நண்பர்களின் நட்பை மறந்து, நம்மை ஆளாக்கிய குடும்பத்தின் தியாகத்தை மறந்து, நாட்டை மறந்து எதனையும் விட எவரையும் விட பணம் என்ற ஒன்றே மிகவும முக்கியம் எனக்கருதி ஓடிக்கொண்டிருந்த நம் அனைவருக்கும் கன்னத்தில் அறைந்தாற்போல் உண்மையை உணரவைத்திருக்கிறது இந்த கொரோனா.
 
இதுவரை நாம் அனைவருமே அலுவலகங்களுக்கோ, தொழிற்சாலைகளுக்கோ, பாடசாலைகளுக்கோ தொடர்ந்தாற்  போல ஒரு பத்து நாட்கள் விடுமுறையெடுத்தால் கூட இவ்வுலகமே நின்று போய்விடுவது போல வாழ்ந்து வந்தோம். நாம் அனைவரும் இவ்வுலகையே நாம் தான் தாங்கிக்கொண்டுள்ளதாகவும் நாம் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்றும் எண்ணம் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது மூன்று நான்கு மாதங்களாக எதுவும் நம்மால் நடப்பதில்லை, நடக்கும் நிகழ்வுகளின் ஒரு சிறிய துகளின் அளவே நமது செயல்பாடு என்று உணரவைத்திருக்கிறது இந்த கொரோனா. 
 
பொருளாதார அளவில் பெரும்பான்மையான மக்களுக்கு இந்த கொரோனா மிகவும் கெடுதலையே செய்துள்ளது, ஆம் பணத்தின் மதிப்பீடு அளவில். ஆனால் பணத்தின் மீது மனிதன் கொண்டுள்ள அடிப்படை புரிதலை மிகவும் விளங்கிக்கொள்ள உறுதுணையாக விளங்கியுள்ளது இந்த கொரோனா என்றால் அது மிகையில்லை. இதுவரை எவ்வளவு இருந்தாலும் போதவில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த மனிதனின் மனதில் தற்போது நாம் நலமாக வாழ எவ்வளவு இருந்தால் போதுமானது என்ற எண்ணத்தை உருவாகியுள்ளது இந்த கொரோனா. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது நம் முன்னோர் வாக்கு. அவ்வுன்னதமான வாழ்விற்கு அடிப்படை வித்தாய் அமைந்துள்ளது இக்கொரோனா.
 
எப்போதுமே எப்படி பணத்தை ஈட்டுவது ஈட்டிய பணத்தை எப்படி பெருக்குவது அப்பணத்தை கொண்டு எந்த வாகனம் வாங்கலாம் எவ்வளவு தங்கம் வாங்கலாம் எவ்வளவு நிலம் வாங்கலாம் எங்கே வீடு வாங்கலாம் இன்னும் என்னென்னவெல்லாம் வாங்கலாம் என்று சர்வகாலமும் எண்ணிக்கொண்டிருந்த நாம், கடந்த மூன்று நான்கு மாதங்களாக பொருளின் மீது கொண்டிருந்த அளவில்லா அவாவினை மறந்து நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற நம் முன்னோரின் மந்திர வார்த்தையை உணர்ந்து நம் உடலையும் உயிரையும் காக்கும் நற்செயல்களில் நமது முழு கவனத்தையும் செலுத்த தொடங்கிவிட்டோம். நம்மிடம் எவ்வளவு குறைவற்ற செல்வம் இருப்பினும் அது நம் உயிரை காக்க உதவாது என்ற மாபெரும் உண்மையை நமக்கு உணரச்செய்திருக்கிறது இக்கொரோனா.
 
அதுமட்டுமல்லாமல் நாம் நலமாக இருந்தால் மட்டும் போதாது நமது அண்டை வீட்டாரும் எதிர் வீட்டாரும் அனைவரும் நலமாக இருந்தால் தான் நாமும் நலமாக இருக்க முடியும் என்ற மாபெரும் உண்மையை  உணர்த்தியிருக்கிறது இக்கொரோனா. ஏனெனில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுவது இக்கொரோனா. எனவே நம்மை சுற்றியுள்ளோர் நலமாக இருந்தால் மட்டும் தான் நாம் நலமாக இருக்க முடியும். எனவே இதுவரை தனக்காகவே சுயநலமாக இறைவனை வேண்டிக்கொண்டிருந்த மனிதனை தன்னை சுற்றியுள்ள அனைத்து மனிதர்களுக்காகவும் பொதுநலத்துடன் இறைவனை வழிபடசெய்துள்ளது இக்கொரோனா.
 
மக்களிடையே இத்தகைய பல உன்னதமான மாற்றங்களை கொண்டு வந்துள்ள இக்கொரோனா உண்மையில் வரமா சாபமா, நீங்களே நீதிபதி.
 
வாழ்க தமிழகம்!!!     வளர்க பாரதம்!!!
 
க.நந்தகுமார்
24/07/2020

சீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.

2018- ஜூன்,ஜூலை.. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பொருளாதார வர்த்தகப் போர்(Trade War) தொடக்கம்.

2019-செப்டம்பர்..சீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.

2019- அக்டோபர்..சீன அதிபர் இந்தியா வருகை.மகாபலிபுரம் ஜி ஜின் பிங்க்- மோடி பேச்சுவார்த்தை.

2019- டிசம்பர்..சீனாவில் வூகான் நகரில் கொரோனா தொற்று பரவல்.

2020-பிப்ரவரி..அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை.மோடியுடன் பேச்சுவார்த்தை.

2020-மார்ச்..இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமல்.

2020-மே..இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல் எல்லையில் பதற்றம்.

2020 மே-ஜூன்-ஜூலை..இந்திய அரசின் பொது சொத்துகளான வங்கிகள்,ரயில்வே,விண்வெளி,பாதுகாப்புத்துறை உட்பட அனைத்தையும் தனியார் மயமாக்குவதற்கான தீவிர முயற்சிகளை எடுக்கிறது மோடி அரசு.இந்தியாவில் முதலீடு செய்ய் வருமாறு அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களை கூவிக் கூவி மோடி அரசு அழைக்கிறது.

இதன் தொடர்ச்சியாக பல அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் முதலீடு..உலகப் பணக்காரர்கள் வரிசையில் 16 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்கு முகேஷ் அம்பானி சில மாதங்களிலேயே முன்னேற்றம்..

மேற்கண்ட நிகழ்வுகளை வரிசைப்படுத்திப் பார்க்கும் போது கொரோனா என்பது சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகப் போரின் விளைவாக ஏற்பட்டது என்பது புரியும்.மேலும் இந்த வர்த்தகப் போரில் தேவையின்றி இந்தியாவையும் மோடி அரசு இழுத்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தையும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்வாதாரங்களையும் நாசம் செய்துள்ளதையும் புரிந்து கொள்ளலாம்.

மோடிக்கு வேண்டிய சில கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறிக்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலன் காவு கொடுக்கப்படுகிறது.

சீனாவுடனான வர்த்தகத்தில் தனக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவை பயன்படுத்த திட்டமிடுகிறது அமெரிக்கா.இந்த திட்டத்தோடு தான் ஜியோ போன்ற நிறுவனங்களில் அமெரிக்க கார்ப்பரேட்டுகள் பெருமளவில் முதலீடு செய்கின்றன.

கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக மட்டுமே செயல்படும் மோடி அரசு அமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு உடந்தையாக செயல்படுகிறது.

இதனால் அந்நிய கார்ப்பரேட்டுகளும் இந்திய கார்ப்பரேட்டுகளும் இந்தியாவின் பொது சொத்துக்களையும் இந்திய மக்களையும், நாட்டின் இயற்கை வளங்களையும் கூட்டுக்கொள்ளை அடிப்பதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. நாட்டில் பஞ்சமும் பசியும் பட்டினி சாவுகளும் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன.

இதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமாக வேண்டும்.சொந்த நாட்டிலேயே மக்களை அகதிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் மாற்றும் மோடி அரசு வீழ்த்தப்பட வேண்டும்.

மக்களின் நலனைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு அரசை உருவாக்குவதே நாட்டுப்பற்றுள்ள அனைவரின் முன் உள்ள கடமையாகும்.

-நந்தினி ஆனந்தன்..

கொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்…

கொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்….

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கொரொனா வேகமாக பரவி வரும் சூழலில் அரவக்குறிச்சி பஞ்சாயத்து குழுவினர் தொற்று பாதித்த நபர்கள் வசித்த தெருவை சுத்தம் செய்து, தெரு ஆரம்பமாகும் இடத்தில் கபசுரக் குடிநீர் மக்களுக்காக கொடுத்து வருகின்றனர். மேலும் அரவக்குறிச்சி ஜீவா நகர் பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சிறப்பாக செயல்படும் அரவக்குறிச்சி பஞ்சாயத்து குழுவினருக்கு இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்

பொது மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

“கொரோனா” தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை சித்த மரு திரு.வீரபபாபு தலைமையில் மிக சிறப்பாக செயல்படுத்தி
வருகிறார்.

1.கட்டணம் : இல்லை (இலவசம்)

2.காலம்:5-7 நாட்கள்.

3.சேர தேவையானவை : கொரோனா
பாசிட்டிவ் என வந்த SMS அல்லது மெடிக்கல் ரிப்போர்ட், ஆதார் அட்டை.

  1. படுக்கை வசதி : 300.
  2. சிகிச்சை : மூலிகை தேனீர், கபசுரக் குடிநீர், மூச்சுப்பயிற்சி போன்ற சிகிச்சைகள்.
  3. உணவு : காலை டிபன், மதியம் சாப்பாடு, தோரம் பருப்பு,சாம்பார், வத்தக்குழம்பு, மிளகு ரசம், மாலை கொண்டகடலை சுண்டல், இரவு டிபன்,
  4. இறப்பு விகிதம் : 0%
  5. சுகாதாரம் : 100%

நோயாளிகள் உயர்தரமான சிகிச்சைகளும், உயர்தரமான உணவுகளும் , ஆரோக்கியமான உடல் பயிற்சிகளும் பெற்று “கொரோனா” தொற்று இல்லாமல் குணமாகி வருகின்றனர்.

மக்களே! இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முகவரி:
Dr.veerababu,
Jawahar engineering college,
No.54, Kalaignar St, Kaveri Rangan nagar, Saligramam, Chennai, Tamil Nadu 600093
தொடர்பு எண் -விவேக் 9551241624

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பாவா நகர் 1 ல் தார்ச்சாலை அமைக்கும் பணி…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பாவா நகரைச் சுற்றி வர தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த செயல் திறம்பட பாவா நகருக்கு கொண்டு வந்த பெருமை பாவா நகர் மக்களுக்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கும் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று பாவா நகருக்கு சாலை அமைக்கும் பணியை விரைவில் கொண்டு வந்தமைக்கு தமிழக அரசுக்கும் மற்றும் அரவக்குறிச்சி பஞ்சாயத்து அதிகாரிகளுக்கும் இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

எட்டு எட்டா தமிழகத்தை பிரிச்சிக்கோ.. எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்கோ!


எட்டு எட்டா தமிழகத்தை பிரிச்சிக்கோ.. எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்கோ!

சென்னை: தமிழகத்தில் பொது பேருந்து போக்குவரத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.
நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கிற்கான புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.
போக்குவரத்திற்காக தமிழகத்தை எட்டு எட்டாக பிரித்த அரசு.


மண்டலம் 1- கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்
மண்டலம் 2- தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி
மண்டலம் 3- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி
மண்டலம் 4- நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை
மண்டலம் 5- திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்
மண்டலம் 6- தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி
மண்டலம் 7- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
மண்டலம் 8- சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதி


மண்டலம் 7-இல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னைகாவல் எல்லைக்குள்பட்ட பகுதிகள் தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.
மண்டலம் 7, மண்டலம் 8-க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கபபடும்.

தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50 சதவீத பேருந்துகள் இயக்கம்.. அரசு அறிவிப்பு
மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ பாஸ் தேவையில்லை என்ற நிலையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ பாஸ் அவசியமில்லை.
அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.
அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும்.
இ பாஸ் முறை
அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ பாஸ் தேவையில்லை.
வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரவும் மண்டலங்களுக்கிடையே சென்று வரவும் இ பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

புறக்கணிக்கும் ஊடகங்கள் இளைஞர்கள் பயணிக்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சியை…

மதுபான கடைகளை மூடக்கோரி தமிழகமெங்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைவரும் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மதுபானக்கடைகளை மூடக்கோரி மனுக்கள் கொடுத்து வருகின்றனர் அதுபோல மதுபான கடைகளில் நிற்கும் குடிமகன்கள் இடம் நிவாரண நிதியை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் உண்டியலில் வசூல் செய்து அதை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் இருந்ததை பார்த்து ஒரு சில குடிமகன்கள் விழிப்புணர்வு வந்திருக்கும் என்று நம்புவதாக இந்நிகழ்ச்சி மக்களின் மனதில் சென்றடைந்தது என்பதை நாம் மறுக்க இயலாது.

 

 

குறிப்பாக எந்த ஒரு நல்ல விஷயங்களையும் ஊடகங்கள் பிரித்துக் காண்பிப்பது வியப்பாக இருக்கிறது…

அப்துல்கலாம் அய்யா அவர்களே நாளைய இந்தியா இளைஞர்களின் கையில் என்று கூறியதை இப்பொழுது நினைவுபடுத்த விரும்புகிறோம்.

like

இளைஞர்கள் ஒரு பக்கம் டாஸ்மாக்கில் நின்று நிவாரணம் சேகரிப்பதும் மறுபக்கம் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதும் இந்த தமிழகத்தில் அதுவும் தமிழ்நாடு இளைஞர் கட்சியை சேர்ந்த இளைஞர்களால் அரங்கேறிக் கொண்டிருக்கிறது…

இந்த வித்தியாசமான முயற்சிகளை எடுத்த இந்த இளைஞர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கும் இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கச்சா எண்ணெய் விலை ஜீரோவிற்கு கீழே ஆனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஹீரோ விலையில்…

ஜீரோ வின் மதிப்பு மிகப்பெரியது என்பதை இந்தியா தொடர்ந்து மக்களுக்கு வலியுறுத்தி வருகிறது.

ஏனெனில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு குறைந்து ஜீரோ விற்கும் கீழே சென்று கொண்டிருக்கும் வேளையில்… கச்சா எண்ணெய்யை பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் உருவாக்கி அதை ஹீரோ விலையில் விற்பது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை…

மற்ற நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய விலையும் தருகிறார்கள் இன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES