பாவனா பாலகிருஷ்ணன் – இவரை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கும் VJ என்று மட்டும் தனித்து குறிப்பிட்டு சொல்லமுடியாது. தொகுப்பாளி, டான்சர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடுவது, ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம் என பன்முகத்தன்மை திறன் உடையவர்.
இவர் சமீபத்தில் வெளியான “வார்” படம் பார்த்துவிட்டு ட்விட்டரில் இவர் தட்டிய ரெவியூ பற்றி தான் நாம் பார்க்கப்போகிறோம்.
” ஆண்களுக்கு விறு விறு ஆக்ஷன், கார் சேசிங் மற்றும் ஹாலிவுட் போன்ற ஸ்டுயன்ட் காட்சிகளுக்காக படம் பிடிக்கும். பெண்களுக்கு படம் பிடிக்க இரண்டு முக்கிய காரணம் டைகர் ஷெராப் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் தான். அவ்வளவு அருமை. ஹ்ரித்திக் இன்னும் அதிக படங்கள் நடிக்க வேண்டும் மேலும் அவர் விந்தணு தானம் கூட செய்யவேண்டும். போய் படத்தை பாருங்கள்.” என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். இது புதுவிதமான தானம் தான் பாவனா பாலகிருஷ்ணன்…..
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா புதிய உயர்வைப் பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும்(176, 127) சதம் அடித்ததையடுத்து, பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 17-வது இடத்துக்கு ரோஹித் சர்மா முன்னேறியுள்ளார்.
இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததையடுத்து தரவரிசையில் 38 இடங்கள் உயர்ந்து, 25-வது இடத்துக்கு முன்னேறியுல்ளார்.
கேப்டன் விராட் கோலி கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரிக்குப் பின் 900 புள்ளிகளுக்கு கீழ் குறைந்து தொடரந்து 2-வது இடத்தில் 899 புள்ளிகளுடன் நீடிக்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 937 புள்ளிகளுடன் உள்ளார்.
இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தியதையடுத்து பந்துவீச்சாளர்கள் டாப்10 வரிசையில் இடம் பிடித்து 10-வது இடத்தை அடைந்துள்ளார். இதற்கு முன் 14-வது இடத்தில் அஸ்வின் இருந்தார். ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் அஸ்வின் முதல் 5 இடங்களுக்குள் உள்ளார்
மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி 18-வது இடத்தில் இருந்து 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பந்துவீசசாளர் தரவரிசையில் 710 புள்ளிகளை ஷமி பெற்று இருப்பது இதுதான் முதல் முறையாகும்.
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவிந்திர ஜடேஜா 2-வது இடத்துக்கு உயர்ந்து, வங்கதேச வீரர் சகிப் அல்ஹசனை 3-வது இடத்துக்கு பின்தங்க வைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க வீரர் டீ காக் சதம் அடித்ததையடுத்து, பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்று 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். எல்கர் 5 இடங்கள் முன்னேறி 14-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்தினம் உட்பட 50 முக்கிய பிரமுகர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது, நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு இளைஞர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்திய நாட்டின் குடிமகனின் கருத்து சுதந்திரத்தை பறிப்பது அது பாரதப் பிரதமராக இருந்தாலும், இது சர்வாதிகார போக்கு, இது சரியா? என ஐயம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் என்னும் அரசர்கள் பிரதம மந்திரியை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்த குழந்தையின் தாய் பிரசவத்தில் இறந்து விட்டார் அந்த தாயின் இதயத்தை ஒருவருக்கு தானம் செய்து விட்டார் அந்த இதயம் இந்த வீடியோவில் வரும் கருப்பு சட்டை அணிந்த நபருக்கு பொருத்தப்பட்டுள்ளது குழந்தை அழுகின்றது குழந்தையின் அழுகையை நிறுத்த அந்தக் குழந்தையை ஒவ்வொருவராக மற்றவர்கள் அரவணைக்கிறார்கள்ஆனால் அந்த குழந்தை அழுகையை நிறுத்தவில்லை பிறகு அந்த குழந்தையை கருப்பு சட்டை அணிந்த நபருக்கு நபரிடம் கொடுத்தபொழுது அந்த அம்மாவின் இதய துடிப்பை கேட்டு அந்த குழந்தை அழுகையை விட்டுவிட்டு அந்த நபரிடம் கொஞ்சி விளையாடுகிறது.
நீண்ட நேரம் இரண்டும் பேசி கொண்டிருந்தன இந்த உலகம் யாரை நம்பும் என்னைத்தான் என்னைத்தான் என்று இரண்டும் மாறி மாறி சொல்லிக் கொண்டே அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றன…
தன் ஆடைகளை களைந்து கிணற்றில் இறங்கி குளிக்க ஆரம்பித்தன சுத்தமான நீர் மிதமான சூட்டில் உண்மை மெய்மறந்து குளிக்க ஆரம்பிக்க, பொய் மேலே வந்து உண்மையின் ஆடைகளை அணிந்துக்கொண்டு நான் தான் உண்மை என ஊர்சுற்ற ஆரம்பித்து விட்டது…
கிணற்றில் இருந்த உண்மை அம்மனமாக வெளியே வர அதன் ஆடைகளை காணோம் பொய் ஆடையையும் அணிய முடியாது இருந்தாலும் ஊரில் உள்ள எல்லோரிடமும் நான் தான் உண்மை என சொல்லியும் யாரும் நம்பவில்லை கல்லால் அடிக்க தொடங்கி விட்டனர்..
உண்மை மீண்டும் போய் கிணற்றில் ஓளிந்து கொண்டது …
இந்த பொய் ஆனந்தமாக தனது புளுகிமூட்டை கதைகளுடன் மின்னல் வேகத்தில் உலகை சுற்றி வந்தது…
மஞ்சள் சுடிதாரில் வந்த கவிதா தேவி, ஒரு வீராங்கனையை தலைக்கு மேல் தூக்கி சுழற்றியடித்த வீடியோவை பார்த்தவர்கள் மிரண்டிருப்பார்கள். ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, தற்போது, WWE எனப்படும் உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் சேருவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் பெருமையை பெறும் முதல் இந்தியப் பெண் கவிதா.
முன்னாள் பளுதூக்கும் வீராங்கனையான ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, சில மாதங்களுக்கு முன் நடந்த மே யங் கிளாசிக் பெண்கள் போட்டியில், கவிதா தேவி பங்கேற்றார்.
பிபி புல் புல் என்ற வீராங்கனையை தலைக்கு மேல் தூக்கி வீசிய காட்சி வீடியோவில் பரவியது. அந்தப் போட்டியில் கவிதா தோல்வியடைந்தாலும், மஞ்சள் நிற சுடிதார் அணிந்து அவர் பங்கேற்ற வீடியோ வெகு வேகமாக பரவியது.
மிகப் பிரபலமான மல்யுத்த வீரரான, பஞ்சாப்பை சேர்ந்த கிரேட் காளியிடம் பயிற்சி பெற்றவர் கவிதா. தற்போது டபிள்யூடபிள்யூஇ அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் முதல் இந்திய பெண் என்ற பெருமை கவிதாவுக்கு கிடைத்துள்ளது. இந்த போட்டிகளுக்காக சிறப்பு பயிற்சிகள் அவருக்கு வழங்கப்பட உள்ளது.
இவருடன், ஜோர்டானை சேர்ந்த ஷாதியா பெய்ஸோ என்ற பெண்ணும், ஒப்பந்தம் செய்துள்ளார். அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண். மல்யுத்தத்தில் களமிறங்கப் போவதும் இதுவே முதல் முறையாகும்.
*கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.*
*?நிகழ்வுகள்*
?கிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர்.
?1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினான்.
?1739 – உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் உருசியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
?1908 – பிராவ்தா செய்திப்பத்திரிகை லியோன் திரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளியிடப்பட்டது.
?1918 – மூன்றாம் போரிசு பல்கேரியாவின் மன்னனாக முடிசூடினான்.
?1929 – செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு யுகோசுலாவியா எனப் பெயரிடப்பட்டது.
?1932 – ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
?1935 – இத்தாலி எதியோப்பியாவினுள் ஊடுருவியது.
?1942 – செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது 85 கிமீ உயரத்துக்கு சென்றது.
?1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் கிரேக்கத்தில் லிஞ்சியாதெசு கிராமத்தில் 92 பொதுமக்களைக் கொன்றனர்.
?1952 – ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
?1962 – சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி சீரா ஒன்பது மணி நேரத்தில் ஆறு தடவைகள் பூமியைச் சுற்றினார்.
?1963 – ஒண்டுராசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது.
?1981 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
?1985 – அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
?1989 – பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
?1990 – செருமானிய மீளிணைவு: செருமானிய சனநாயகக் குடியரசு முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் செருமனி என்ற பெயரில் இணைந்தன.
?1993 – சோமாலியாவின் இராணுவத் தலைவர் முகம்மது பரா ஐடிடு என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.
?2001 – வங்காளதேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் காலிதா சியாவின் வங்காளதேசக் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.
?2010 – 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் தில்லி நகரில் ஆரம்பமாயின.
?2013 – இத்தாலியின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.
?2015 – ஆப்கானித்தானில் குண்டூசு மருத்துவமனை மீது வான் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
?கிமு 331– பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகத்தின் மூன்றாம் டாரியசு மன்னனை குவாகமேலா சமரில் வென்றான்.
?366– முதலாம் தாமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
?959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
?965 – பதின்மூன்றாம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
?1553 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் முடிசூடல் நிகழ்வு இடம்பெற்றது.
?1730 – உதுமானிய சுல்தான் மூன்றாம் அகமது முடி துறந்தான்.
?1787 – அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன.
?1795 – ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற இசுப்பிரிமொண்ட் சமரை அடுத்து, பிரான்சு தெற்கு நெதர்லாந்தை அதிகாரபூர்வமாகக் கைப்பற்றியது.
?1799 – கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமான் கைது செய்தார்.
?1800 – எசுப்பானியா லூசியானாவை பிரான்சிடம் தந்தது. முப்பது மாதங்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா அதனை பிரான்சிடம் இருந்து வாங்கியது.
?1814 – நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியன்னா மாநாடு கூடியது.
?1827 – உருசிய-பாரசீகப் போர்: உருசிய இராணுவம் யெரெவானைக் கைப்பற்றியது. ஆர்மீனியாவில் முசுலிம்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
?1833 – இலங்கையில் சட்டவாக்கப் பேரவை, மற்றும் நிறைவேற்றுப் பேரவை ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.[1]
?1843 – நியூசு ஆப் த வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.
?1854 – இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
?1880 – இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
?1887 – பிரித்தானியா பலூசிஸ்தானைக் கைப்பற்றியது.
?1892 – இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டு, வெள்ளி நாணயம் அறிமுகமானது.[2]
?1898 – உருசியாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.
?1910 – லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
?1918 – முதலாம் உலகப் போர்: அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கசு நகரைக் கைப்பற்றினர்.
?1936 – பிரான்சிஸ்கோ பிராங்கோ எசுப்பானியாவின் தேசிய அரசின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
?1939 – இரண்டாம் உலகப் போர்: ஒரு மாத கால முற்றுகையின் பின்னர் செருமனியப் படைகள் வார்சாவா நகரைக் கைப்பற்றின.
?1942 – இரண்டாம் உலகப் போர்:: அமெரிக்காவின் குரூபர் கப்பல் ஆங்காங்கில் இருந்து பிரித்தானியப் போர்க் கைதிகளை ஏற்றி வந்த லிசுபன் மாரு என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
?1943 – நாபொலியின் நான்கு நாட்கள்: நேச நாடுகளின் படைகள் நாபொலி நகரைக் கைப்பற்றின.
?1896 – லியாகத் அலி கான், பாக்கித்தானின் 1வது பிரதமர் (இ. 1951)
?1904 – ஏ. கே. கோபாலன், இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1977)
?1906 – எஸ். டி. பர்மன், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1975)
?1912 – கத்லீன் ஒல்லரென்ழ்சா, ஆங்கிலேய கணிதவியலாளர், வானியலாளர், அரசியல்வாதி (இ. 2014)
?1918 – ஜி. வெங்கடசாமி, இந்தியத் தொழிலதிபர், கண் மருத்துவர் (இ. 2006)
?1924 – ஜிம்மி கார்ட்டர், அமெரிக்காவின் 39வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
?1927 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2001)
?1928 – சூ சுங்ச்சி, சீனாவின் 5வது பிரதமர்
?1932 – அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (இ 2009)
?1936 – கே. எஸ். சிவகுமாரன், ஈழத்து எழுத்தாளர், திறனாய்வாளர்
?1941 – சி. க. சிற்றம்பலம், ஈழத்து வரலாற்றாய்வாளர், கல்வியாளர், எழுத்தாளர்
?1941 – செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2008)
?1956 – தெரசா மே, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
?1958 – ஆந்தரே கெய்ம், உருசிய-டச்சு இயற்பியலாளர்
?1998 – பாலச்சந்திரன், இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சிறுவன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கடைசி மகன் (இ. 2009)
இறப்புகள்
?1404 – ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) (பி. 1356)
?1973 – பாபநாசம் சிவன், கருநாடக, தமிழிசை அறிஞர் (பி. 1890)
?2008 – பூர்ணம் விஸ்வநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (பி. 1921)
?2010 – அவுதவின் தோல்பசு, பிரான்சிய வானியலாளர் (பி. 1924)
?2012 – எரிக் ஹாப்ஸ்பாம், எகிப்திய-ஆங்கிலேய மார்க்சிய சிந்தனையாளர், வரலாற்றாளர் (பி. 1917)
?2013 – டாம் கிளான்சி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1947)
?2014 – ராபர்ட் செரா, வெனிசுவேலாவின் அரசியல்வாதி (பி. 1987)
சிறப்பு தினம்
?குழந்தைகள் தினம் (எல் சால்வடோர், குவாத்தமாலா, இலங்கை)
?சீன தேசிய தினம்
?விடுதலை தினம் (சைப்பிரசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960); (நைஜீரியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960); (பலாவு, ஐக்கிய நாடுகளிடம் இருந்து, 1994); (துவாலு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1978)
குழந்தைகளுக்கு மட்டும்தான் எதிர்பார்ப்புகள் இருக்கும்என்றில்லை முதியவர்களுக்கும் எதிர்பார்ப்புகள் அதிகம், பாதுகாப்பு குறித்த அச்சம் இருக்கும்.
வயதான பெற்றோரை பிள்ளைகள் கைவிட்டால் அவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க வகையில் சட்டத்தை திருத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கிறது.
பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை அவர்களது முதுமை காலத்தில் உடன்வைத்து காத்து பராமரிக்க வேண்டி கடமை பிள்ளைகளுக்கு உண்டு.
ஆனால் இந்த கடமையை இன்றைய தலைமுறை பிள்ளைகள் எளிதாக துறக்கின்றனர்.
இதனால் வயதான காலத்தில் பெற்றோர் அல்லாடுகிற நிலை உள்ளது. அவர்களை கவனிக்க யாருமற்ற சூழலும் உருவாகிறது. இது அவர்களை மன உளைச்சலில் தள்ளுகிறது. ஒரு கட்டத்தில் விபரீத முடிவு எடுக்கவும் வைக்கிறது.
இது பிரதமர் அலுவலகத்தின் கவனத்துக்கு சென்றிருக்கிறது. இதையடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சமூக நலம் மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்பேரில் அந்த அமைச்சகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. தற்போது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு, நலச்சட்டம்-2007-ன்படி, வயதான பெற்றோரை உடன் வைத்து பராமரிக்காமல், பிள்ளைகள் கைவிட்டால் 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்க முடியும்.
இப்போது இந்த சட்டத்தை திருத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தண்டனை 3 மாதத்தில் இருந்து 6 மாதமாக அதிகரிக்கப்படுகிறது.
தண்டனையை அதிகரிப்பதுடன் வயதான பெற்றோரை, மூத்த குடிமக்களை பாதுகாக்கிற கடமை யாருக்கெல்லாம் உண்டு என்பதற்கான உறவு வரம்பினை விரிவுபடுத்தவும் வரைவு மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், குழந்தைகள் மட்டுமின்றி தத்து குழந்தைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் ஆகியோருக்கும் மூத்த குடிமக்களை காக்கிற கடமை உண்டு என்பது சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படுகிறது.
தற்போது மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள் மட்டுமே சட்ட வரம்புக்குள் வருகிறார்கள்.
தற்போது பராமரிப்பு தொகையாக பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் வரை தரலாம் என்றிருக்கிறது. இந்த வரம்பை நீக்கி விட்டு, இப்போது பிள்ளைகள் நல்ல சம்பளம் பெறுவதால் அதற்கு ஏற்ற வகையில் பெற்றோருக்கு கூடுதல் தொகையை பராமரிப்பு செலவாக தரவும் சட்ட திருத்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வயதானவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும் மரியாதைகளையும் கொடுக்கவேண்டும், அவர்களுக்கு உரிய உரிமைகளையும், சுதந்திரத்தையும் அளிக்கவேண்டும்.