Tuesday , July 1 2025
Breaking News
Home / செய்திகள் (page 81)

செய்திகள்

All News

  மயிலாடுதுறையில் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு! உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை.!

  மயிலாடுதுறை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு! உடன் நடவடிக்கைகள் எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முறையாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்பதே அரசின் முதன்மையான குறிக்கோள் ஆகும்.
ஆனால்மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஏற்கனவே வழங்கப்படும் குறிப்பிட்ட அளவு கோதுமை வழங்கப்படுவதில்லை, மிகவும் குறைவாக வழங்கப்படுகிறது என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் இலவசமாகவும் குறைந்த விலைக்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாகஒரு வேளைகூட உணவு இல்லாமல் இருப்போரே இல்லை என்னும் நிலையை உருவாக்கவே அரசு முயற்சிகள் செய்து வெற்றியும் பெற்றுள்ளது என்று கூறலாம்.அதனடிப்படையில் ரேஷன் பொருட்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏழை,எளிய நடுத்தர குடும்ப மக்கள் தங்கள் உணவு தேவையை நிறைவேற்றி வருகிறார்கள்.

ரேஷன் கடைகளில் இருந்த குறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தனிக்கவனம் செலுத்தி சரிசெய்து தற்பொழுது தரமான அரிசி, பருப்பு. எண்ணெய் வகைகள் வழங்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்ற நிலையில், கோதுமை மட்டும் அனைத்து குடும்பஅட்டை தாரா்களுக்கும் தடையின்றி முறையாக கிடைப்பதில்லை என்னும் குற்றச்சாட்டு மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள 350-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் இருந்து வருகிறது.

இத்தகைய சூழல் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து இருப்பதாகவும் உடனடியாக ரேஷனில் கோதுமையையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்று கேட்டால் மத்திய அரசு வழங்க வேண்டிய கோதுமையின் அளவினை தமிழ்நாடு உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு வழக்கமாக வழங்குவதை விட பல மடங்கு குறைவாக அனுப்புவதாக அரசின் வழங்கல் அலுவலர்கள் தெரிவிக்கின்றார்கள். கோதுமை அளவை குறைக்காமல் தமிழ்நாட்டுக்கு பெற்று தருகின்ற பொறுப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கவர்னர் ஆர்.என். ரவி போன்றோர் ஏற்க வேண்டும்.

தமிழகத்தின் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பது இதன்மூலம் நிரூபிக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட கோதுமையை வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டும் என்றும், அரிசியோடு நார்சத்து அதிகமுள்ள கோதுமையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்து வருவதாலேயே அனைத்து ரேஷன் கடைகளிலும் கோதுமை தேவையும் ஏற்பட்டுள்ளது என்றும், ஆகவே இச்சூழலை உணர்ந்து மக்களின் நலன்கருதி கோதுமை தட்டுப்பாட்டை நீக்கி வழங்கிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக முருகேசபாண்டி நியமனம்.!

மதுரையில் தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் சார்பாக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகளுக்கு அங்கீகார கடிதம் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது


இந்நிகழ்வின் போது
மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக டி முருகேச பாண்டி அவர்களை நியமனம் செய்யப்பட்டு மாவட்ட தலைவர் முனைவர் ஆர். பிச்சைவேல் முன்னிலையில் அதற்கான அடையாள அட்டை அங்கீகாரச் சான்று மாநில நிர்வாகிகள் வழங்கினார்கள்

தேசிய மனித உரிமைகள் – சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா-தமிழக பிரிவின் மாநில தலைவர், டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களுக்கு, ஜம்மு காஷ்மீரில் Excellent Humanity ) விருது வழங்கி கௌரவிப்பு.!!

National Human Rights
Social Justice Counsil of India – Jammu & Kashmir,
(All India – New Delhi)


சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீர் பிரஸ் கிளப் உள்ளரங்கில் NHR-SJC OF INDIA – விழா நடைபெற்றது.
இதில், மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், மத்திய மாநில அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

விழாவில், NHRSJC சார்பாக, 2022 ம் ஆண்டிற்கான மிக சிறந்த மனிதநேய விருது, (Excellent Humanity Award) இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட
மத்திய, மாநில அமைச்சர் உள்பட 12- பேர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது..

அதில், தேசிய மனித உரிமைகள் – சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா – தமிழக பிரிவின் மாநில தலைவர், டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களின் பல்வேறு சமூக சேவையை பாராட்டி Excellent Humanity ) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விருதை பெற்றுக் கொண்ட டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களுக்கு மதுரை மாவட்ட தலைவர் பிச்சைவேல் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

“தேசிய மனித உரிமைகள்- சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் மதுரை வடக்கு மாவட்ட தலைவராக வி.பி.ஆர். செல்வகுமார் நியமனம்.!

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மதுரையில் “தேசிய மனித உரிமைகள்- சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு சார்பாக புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு அங்கீகார சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தலைவர் முனைவர் ஆர்.பிச்சைவேல் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வின் போது புதிதாக நியமனம் செய்யப்பட்ட மதுரை வடக்கு மாவட்ட தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் தலைவராக வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களுக்கு, தேசிய தலைமையில் இருந்து வழங்கப்பட்ட நியமனம் செய்வதற்கான அங்கீகார கடிதம் மற்றும் அடையாள அட்டையை மாவட்ட தலைவர் பிச்சைவேல் முன்னிலையில் மாநில நிர்வாகிகள் வழங்கினர்.

மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, தேசிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரையில் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும், சாலையோர வாசிகளுக்கும் உணவு வழங்கி வரும் மதுரை அட்சய பாத்திரம் நிறுவனத்திற்கு குவியும் பாராட்டு.!

மதுரையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும், சாலையோர வாசிகளுக்கும் உணவு வழங்கி வரும் மதுரை அட்சய பாத்திரம் நிறுவனத்திற்கு குவியும் பாராட்டுக்கள்
மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் கொரோனா நோய்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து சாலையோர வாசிகள் மற்றும் வறியோருக்கு, இயலாதோருக்கு மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தினமும் உணவு வழங்கி வருகிறார்.
தினமும் பசியால் வாடி நிற்கும் சாலையோர வாசிகளை கண்ட இவர் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்த நிலையிலும் தினமும் உணவு வழங்கின்றார். இன்றுடன்
580 நாள் நிறைவடைந்த இந்நாளில்
கார்த்திகை தீப திருவிழா என்பதால்பூங்கா முருகன் கோவில் வந்த பக்தர்களுக்கும், சாலையோ வாசிகளுக்கும், மதுரை ராஜாஜி மருத்துவமனை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல பிரிவின் அருகே நோயாளிகளின் உறவினர்களுக்கும் உணவினை வழங்கினார்.

அட்சய பாத்திர டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு கூறும்போது உலகத்தில் மனதிற்கு இன்பம் அளிப்பது கொடுப்பதில் தான் இருக்கிறது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அந்த வகையில் மதுரையின் அட்சய பாத்திரம் மூலம் வறியவர்களுக்கும், மனநலம் பாதித்தவர்களுக்கும் சாலையோர வாசிகளுக்கும் தொடர்ச்சியாக 580 நாட்களுக்கும் மேலாக மதிய உணவு வழங்கிறோம் என்றும், இன்று கார்த்திகை திருவிழா என்பதால் கோவில் கொண்ட பக்தர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது என்றும், இந்த அட்சய பாத்திரம். தொடர்ந்து உணவு தானம் வழங்கிட தொழிலதிபர்கள், நிறுவனர்கள், மேலாளர்கள், அலுவலர்கள் உதவ வேண்டும் என்றார்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் அறிவுறுத்தலின்படி, மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சசிக்குமார், விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் ஆலோசனைப்படி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி ஒன்றியத்தில் மேற்கு மாவட்ட விவசாய அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு
பொதுச் செயலாளர்கள் தர்மர்,சுரேஷ், ரத்தினசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்நிகழ்வில் செயலாளர்கள் பெருமாள், ரமேஷ்கண்ணன், மகாலிங்கம்,Ex Army சந்திரசேகர் உள்பட நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் மண்டல் தலைவர் வேல்முருகன் நன்றி உரை கூறினார் மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மதுரையில் “பெட்கிராட்” சார்பாக சான்றிதழ் வழங்கும் விழா.!




மதுரையில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசெஞ்சர் மற்றும் “பெட்கிராட் அமைப்பு இணைந்து, குமாரம் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு இலவசமாக சணல் லேப்டாப் பை தயாரிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி எஸ்.எஸ்.காலனியில் உள்ள “பெட்கிராட்” அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் சாராள்ரூபி வரவேற்று பேசினார். தலைவர் சுருளி,பொதுச் செயலாளர் அங்குசாமி, பொருளாளர் கிருஷ்ணவேணி, செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட அலுவலர் கார்த்திகேயன் பேசுகையில், பயிற்சி பெற்றதோடு நிறுத்திக் கொள்ளாமல் சுயதொழில் துவங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை பெற்று தரப்படும் என கூறினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேங்க் ஆப் பரோடா வெங்கடேஷ் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ சக்ரா நிர்வாக இயக்குனர் சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியின் முடிவில் பெட்கிராட் துணைத் தலைவர் மார்ட்டின் நன்றியுரை கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் ரேவதி செய்திருந்தார்.

குஜராத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை முன்னிட்டு மதுரை வண்டியூர் மண்டல் சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளதை முன்னிட்டு,மதுரை மூன்றுமாவடி நான்கு ரோடு சந்திப்பு அருகே பாஜக வண்டியூர் மண்டல் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் மண்டல் தலைவர் திருப்பதி, பொதுச்செயலாளர் சந்தோஷ் சுப்பிரமணியம், பிரச்சார பிரிவு மாநில தலைவர் பாஸ்கரன், விவசாய அணி மாநில பொறுப்பாளர் பால்ச்சாமி,ஊடக பிரிவு தலைவர் செல்வமாணிக்கம், மண்டல் பொதுச் செயலாளர் கோகிலா, மகளிரணி போதும்பொன்னு, பொன்னம்மாள் இளைஞரணி சுரேஷ் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை முன்னிட்டு மதுரையில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளதை முன்னிட்டு, மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் ஜெயவேல் ,மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி, ஓபிசி அணி மாநில பொருளாளர் மோகன்குமார்,மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், மீனவர் அணி மாவட்ட தலைவர் இளங்கோ மணி , மாவட்ட துணைத்தலைவர் குமார், 41 வது வார்டு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள நதியில் மஹா தீப ஆராதனை விழா.!

பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பாக கார்த்திகை திருநாளை முன்னிட்டு, நீர் பெருக, நிலம் செழிக்க, தமிழகம் சிறக்க தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் மஹா தீப ஆராதனை திருவிழா நடைபெற்றது.

அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன், மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவர் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மாநில மீனவர் பிரிவு சண்முகநாதன், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார் ஆகியோர் ஆலோசனைப்படி, விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி அவர்களின் தலைமையில் மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள புதுக்குளம் 1பிட் செல்லும் ரோட்டில் உள்ள நதியில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு தீப ஆராதனை விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி, பொதுச் செயலாளர்கள் தர்மர், ரத்தினசாமி, துணைத் தலைவர் மகாலிங்கம், செயலாளர்கள் பெருமாள், ரமேஷ்கண்ணன், மண்டல் பொதுச் செயலாளர் ஜெகதீஸ்வரி, இளைஞரணி மேற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மண்டல் தலைவர் இளையராஜா மற்றும் குபேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES