Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / திருச்சியில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்து பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்
NKBB Technologies

திருச்சியில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்து பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் ஓய்வு பெற்று இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் மாநில அமைப்புச் செயலாளராக சேலம் சின்னத்தம்பி, மாநில செய்தி தொடர்பு செயலாளராக மதுரை ஆசிரியதேவன், மாநில போராட்ட குழு செயலாளராக நாகை காத்தையன் ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாநில கௌரவ பொதுச் செயலாளர் திரு.சி.குப்புசாமி, பொதுச் செயலாளர் திரு.முத்துப்பாண்டியன், பொருளாளர் கலியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு…!

மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு சென்னை ஜூலை 28 சென்னையில் சன்மார்க் சமூக கல்வி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES