Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 110)

செய்திகள்

All News

வள்ளுவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் NKBB டெக்னாலஜிஸில் 20 நாட்கள் இன்டன்ஷிப்…

வள்ளுவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வேர்ட்பிரஸ் கட்டமைப்பில் இணையதள மேம்பாட்டிற்காக என்கேபிபி டெக்னாலஜிஸில் 20 நாட்கள் இன்டன்ஷிப் எடுத்துள்ளனர்.

இளைஞர் குரல், சாமானிய மக்கள் நலக்கட்சி போன்ற என்கேபிபி டெக்னாலஜிஸ் வாடிக்கையாளர்களுக்கு இணையதள மேம்பாட்டில் மாணவர்கள் பணியாற்றினர்.

மாணவர்கள் கேன்வா டிசைன் டூல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றனர். (குறிப்பாக இன்ஸ்டன்ட் டேட்டா ஸ்கிராப்பர் கருவியைப் பயன்படுத்தி தரவு வேட்டையாடும் செயல்முறை). 

சாமானிய மக்கள் நலக்கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் குணசேகரன் சார்பில், சாமானிய மக்கள் நலக்கட்சியின் இணையதள வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பயிற்சியாளர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.



The Students from Valluvar College has taken 20 days internship at NKBB Technologies for website development in WordPress Framework.

Students worked on Website Development to NKBB Technologies clients such as ilangyar Kural, Samaniya Makkal Nalakatchi .

Students had taken training on Canva Design Tool and Digital Marketing too…Especially Data Hunting Process by using Instant Data Scraper tool.

On behalf of the Samaniya Makkal Nalakatchi General Secretary Dr. Gunasekaran said, I would like to express my best wishes and thanks to the trainees involved in the development of the website of the Samaniya Makkal Nalakatchi

மணப்பாறை மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு…

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 20 கலை அறிவியல் கல்லூரிகளைத் திறந்துவைத்து சாதனை படைத்துள்ளார்.

இதில் எமது கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறை மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளையும் இன்று காணொளி வாயிலாகத் திறந்து வைத்துள்ளார்கள்.

இந்த கல்லூரிகள் அமைய வேண்டும் என்பது எமது மக்களின், மாணவர்களின் நீண்ட காலக் கனவு.

அந்த கனவு இன்று நினைவாகி இருக்கிறது. இதற்கான முயற்சியில் எனது எளிய பங்களிப்பும் உள்ளது என்பதில் மகிழ்ச்சியும்,மனநிறைவும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களுக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரஸ் MP) ஜோதிமணி அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை:குழம்பிய குட்டையில் ஜரூராக மீன்பிடிக்கும் சீனா-அடுத்த பிரதமராகும் சஜித் பிரேமதாசவுடன் பேச்சு!

கொழும்பு: இலங்கையில் அதிஉச்சகட்ட அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளவராக கருதப்படும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாவை இலங்கைக்கான சீனாவின் தூதர் சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாத அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த நாடு பற்றி எரிகிறது. தென்னிலங்கை, வட இலங்கை என அனைத்து நிலமும் போர்க்களமாக உருமாறிக் கிடக்கிறது. தலைநகர் கொழும்பில் ஒரு மாத காலமாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய கோரி போராட்டங்கள் தொடருகின்றன.

Thanks to One India….

DEC 29 தமிழகத்தில் தடுப்பூசி திணிப்பிற்கு எதிராக மிகப்பிரம்மாண்ட போராட்டம்…

தேதி : 29.12.2021 நாள் : புதன்கிழமை நேரம் : மதியம் 2.00 மணி

இடம் : சீர்காழி பழைய பேருந்து நிலையம், ஸ்டேட் வங்கி அருகில் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் பெயர் உள்ளிட்ட விபரங்களை இந்த இணைப்பிற்கு சென்று பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 👇🏽

பதிவு படிவம் / Registration form

சீர்காழி போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் இந்த telegram குழுவில் இணையலாம்

https://t.me/tn_covidprotest

சீர்காழி நிகழ்விற்கு வருபவர்கள் யாரேனும் உணவு, குடிநீர், பாக்குமட்டை, பேப்பர் கப் போன்றவற்றை தங்களால் முடிந்த அளவு எண்ணிக்கையில் செலவை ஏற்றுக்கொண்டு, ஏற்பாடும் செய்து விநியோகம் செய்தால் வரவேற்கத்தக்கது. ஆர்வமுள்ளவர்கள் எவ்வளவு எண்ணிக்கைகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறீர்கள் என இந்த Whats app எண்ணில் தெரியப்படுத்தலாம் 📞

9865126889

சீர்காழி போராட்டத்திற்கு நிதியுதவி செய்ய விரும்புவோர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள Google Pay எண்ணுக்கு உங்கள் பங்களிப்பை செலுத்தலாம்

Google Pay Number

7338863911

கட்டாய தடுப்பூசிக்கு எதிராக ஒன்றுகூடுவோம் 🤝 சந்ததி காக்க அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர் 🙏🏽

இயற்கை வழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு

நன்றி

இரா.மதிவாணன்

தூய பேதுரு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற கலந்துரையாடல் நடைபெற்றது

இன்று (18-09-2021) தஞ்சாவூரில் முப்பால் நுண்ணறிவு கலை மன்றம் மற்றும் ஆரஞ்சு தமிழ் (ஏபிசிமேட்ரிக்ஸ்) குழுமத்தின் சார்பாக  தூய பேதுரு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற கலந்துரையாடல் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் ஞா. செல்வகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த பள்ளி 238 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிறப்பிற்குரியது. அதனினும் சிறப்பு இந்த பள்ளி ஜி. யூ. போப் அவர்கள் பணியாற்றிய பள்ளி என்பது மேலும் சிறப்பிற்குரியது. 


இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக, பிரபஞ்ச திருக்குறள் ஆய்வு அறவாரியத்தின் பொதுச் செயலாளர் தமிழ் செம்மல் , தமிழக அரசின் திருவள்ளுவர் விருத்தாளர் முனைவர் மு. க. அன்வர் பாட்சா மற்றும், கவையன் புத்தூர் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர்  செந்தமிழ் கவி சிற்பி ந. கணேசன் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தார்கள்.  தஞ்சாவூர் திருக்குறள் மாரிமுத்து அய்யா அவர்களும், மற்றும் பள்ளி ஆசிரியர் பெருமக்களும் பங்கேற்று நிகழ்ச்சிக்கு அணி சேர்த்தனர். சிறப்பு விருந்தினர்களுக்குச்  சிறப்புச் செய்யப்பட்டது.  


நிகழ்ச்சியில் திருக்குறள் சார்ந்த விளையாட்டு மற்றும் தொழில்நுட்பம் உலகளவில் அறிமுகம் செய்ய முன்மொழியப் பட்டது.


நிறைவாக முப்பால் நுண்ணறிவு கலை மன்றத்தின் தலைவர் பொறியாளர் திருக்குறள் நேசர் கோ. கார்த்திகேயன் அவர்கள் நன்றி நவில நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

21 மாதமான குழந்தையின் உயர் சிகிச்சைக்காக நிதி வசூல் பொதுமக்களிடம்…

17.09.2021 இன்று மாலைப் பொழுதில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் தஞ்சைப் பகுதியை சேர்ந்த பாரதி என்கின்ற 21 மாதமான குழந்தையின் உயர் சிகிச்சைக்காக நிதி வசூல் பொதுமக்களிடம் வரவேற்கப்படுகிறது அந்த வழியாக வந்த நமது தஞ்சை பகுதியை சேர்ந்த காவல்துறை நண்பர்கள் 2 நபர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பும் பயன்படுத்திக் கொண்டார்கள் அவர்களுக்கு எங்களது தமிழ்நாட்டில் உள்ள 🌹”காவல் டுடே”🌹 நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் உதவிய அனைத்துனை நல் உள்ளங்களுக்கும் பணி செய்த தன்னார்வலர்கள் அனைவருக்கும் குழந்தை பாரதியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்🙏🏻✍️குழந்தை பாரதியின் உயிர் காக்கும் மனிதநேய பணியில் நீங்களும் பங்கேற்கலாமே கரம் கொர்ப்போம்🤝🏻🤝🏻🤝🏻 குழந்தையின் உயிரைக் காக்கும் மனிதநேய பணியில் பங்கேற்போம்💐💐 என்றும் உங்களுடன் 🌹”காவல் டுடே”🌹 தஞ்சை மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ் 🙏🌹🙏🌹🙏🌹

Mr. Mugunthan – Reporter Head

இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு தினமாக தஞ்சை மாவட்ட காவல்துறை

இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு தினமாக தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி.ரவளி பிரியா I.P.S அவர்களின் தலைமையில் கந்துவட்டி தடுப்பு சட்டம் 2003 கந்துவட்டி வசூல் செய்வது குற்றம் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு எடுத்துரைத்து உறுதிமொழி கூறப்பட்டது மேலும் காவல்துறை தலைமை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. ஜெயச்சந்திரன் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு.கெனடி மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. ரவீந்திரன் மற்றும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. கபிலன் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. கார்த்திகேயன் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தார்கள் என்றும் உங்களுடன் தமிழ்நாட்டில் உள்ள “காவல் டுடே” நிருபர்கள் குழு சார்பாக 🙏🙏🙏🙏🌹💐வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் “காவல் டுடே” தஞ்சாவூர் மாவட்டம் தலைமை நிருபர் A.ராஜேஷ்🌹🙏🙏🙏🌹

திருச்சி மத்திய மண்டல ஐ. ஜி மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு .V.பாலகிருஷ்ன் I.P.S அவர்களுக்கு பிறந்தநாள்

இன்று 17.09.2021 பிறந்தநாள் காணும் திருச்சி மத்திய மண்டல ஐ. ஜி மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு .V.பாலகிருஷ்ன் I.P.S அவர்கள் வாழ்த்த வயதில்லை எங்களது தமிழ்நாட்டில் உள்ள 🌹”காவல் டுடே”🌹 நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🌹🎂🎂🎂🍫🎂🍫🎂 என்றும் உங்களுடன் தஞ்சை மாவட்ட “காவல் டுடே” தலைமை நிருபர் A.ராஜேஷ் CELL:948 75 75 102, 790 45 45 769 , 812 42 75 102 🌹💐💅🌹💐🌹🙏🙏🙏🙏

பாபநாசத்தில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி பூரணி

பாபநாசத்தில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி பூரணி மேடம் அவர்களுக்கு காவல்டுடே பத்திரிகை சார்பாக நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தாங்கள் ஏற்றுக் கொண்ட உறுதி மொழி அனைத்தும் உண்மை. எனவே விரைந்து உறுதி மொழிகளை நிறைவேற்றவும், தங்களின் பணி சிறக்கவும் பாபநாசம்,தஞ்சை மாவட்ட காவல்டுடே பத்திரிகையின் சார்பாகவும் நன்றியையும், வணக்கத்தையும், தெரிவித்துக் கொள்கிறோம்.இப்படிக்கு காவல்டுடே பத்திரிகையின் தாலுக்கா ரிப்போர்ட்டர் K.அன்பழகன் கபிஸ்தலம்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES