The certificate awarding ceremony was held at FEDCROT office, Madurai
Fedcrot conducted certificate distribution program. sponsored by national jute board.
24 women trained for 50 days to produce free jute bags was held at Fedcrot Office in S.S Colony, Madurai under the leadership of Managing Director M.A Subburaman.
General Secretary Angusamy gave the welcome speech. Ayyappan, Chief Marketing Officer, National Jute Board, Calcutta, who was the chief guest, inaugurated the function by lighting the lamp.
In this, KVIC Assistant Director Anbuchezhiyan, Union Bank of India Senior Manager Amesh Kumar was present.
end of the program, Fedcrot Treasurer Krishnaveni gave vote of thanks. Arrangements for the program were made by secretary Saralruby, vice president Martin Luther King, coaches Vijayavalli and Kannan.
மதுரை விமான நிலையம் அருகே உள்ள வி.ஐ.பி சிட்டியில்,தி இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ரமேஷ் சிமெண்ட் ஏஜென்சி இணைந்து நடத்திய கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்த மதர்லேண்ட் சி.சி அணிக்கும்,2 ஆம் இடத்தை பிடித்த ஸ்மார்ட் சி.சி அணிக்கும் வெற்றி கோப்பையை ரமேஷ் ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் அவர்கள் வழங்கி பாராட்டினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்று சிறப்பித்தார்
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த வாரம் செப்.28.மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.
செப்.28-ந் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனார் அரங்கில் நடைபெற்ற முதல்நாள் நிகழ்ச்சிக்கு ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில மகளிரணி தலைவி சாரதா தலைமை தங்கினார். கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர், முத்தாரம் வரவேற்புரை ஆற்றினார். மேட்டுப்பாளையம் நகரமன்ற துணைத்தலைவர் அருள்வடிவு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
மாநிலத் துணைத் தலைவர் ரஜினிகாந்த் மற்றும் மாநில மகளிரணி துணைச் செயலாளர் சரவணா செல்வி ஆகியோர் இணைந்து நிகழ்ச்சியில் தொகுப்புரை ஆற்றினர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற ‘நிகழ்ச்சியில் சங்கத்தின் எதிர்கால திட்டமிடுதல் குறித்து சங்கத்தின் மாநில மகளிரணி செயலாளர் முத்துச்செல்வி, மாணவர்களிடத்தில் ஆசிரியைகளின் செயல்பாடு குறித்து திருச்சி மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி, சங்கத்தில் ஆசிரியைகளின் செயல்பாடு குறித்து சங்கத்தின் மாநில துணை தலைவர் ஆதவன், சமூகத்தில் மகளிரின் செயல்பாடு குறித்து கோவை மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் செல்வி. பிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியில் மாநில மகளிரணி துணை செயலாளர் சாந்தி நன்றி உரையுடன் முதல் நாள் நிகழ்வு பெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வு செப்.29-ந் தேதியன்று காலை 9.30 மணியளவில் தந்தை ஈ.வெ.ர. பெரியார் அரங்கில் மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் தலைமையில் துவங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் வரவேற்புரையாற்றினார். மதுரை மாவட்ட செயலாளர் கருப்பையா தொகுப்புரை வழங்கினார்.
தொடர்ந்து சங்கத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாநில இணைய ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் உரையாற்றினார். மாநில பொதுக்குழு தீர்மானங்களை மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சின்னதுரை வாசிக்க தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முடிவில் மாநில பொருளாளர் முருகன் சங்கத்தின் வரவு – செலவு அறிக்கையினை வாசித்தார். இதனை தொடர்ந்து மாநில மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சிறிது நேரம் தேநீர் இடைவேளைக்கு பிறகு மாநில பொதுக்குழுவின் அடுத்த நிகழ்ச்சி நண்பகல் 11.15 மணியளவில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் அரங்கில் மாநில தலைவர் பூவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்கள். திருச்சி மாவட்ட செயலாளர் பிரேம்குமார் தொகுப்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தி கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் நகர்மன்றதலைவர் மெகரிபா பர்வீன், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ. ரவி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி , மேட்டுப்பாளையம் நகர செயலாளர் முஹம்மது யூனுஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஒய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி உத்திராபதி மற்றும் தமிழக அரசின் முதன்மை கணக்கு அலுவலர் முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.ம்ம்ஞ்மம்ம்பள
தொடர்ந்து, சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் சங்கத்தின் கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை முன் மொழிந்தார். திருச்சி மாவட்ட தலைவர் செந்தில், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் மணிகண்டன், விழுப்புரம் மாவட்ட தலைவர் குமரேசன் ஆகியோர் சங்கத்தின் எதிர்காலத் திட்டமிடல் குறித்து மதிப்புமிக்க கருத்துகளை பதிவு செய்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கயல்விழி செல்வராஜ், சங்கத்தின் முக்கியமான, நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சங்கர சபாபதி தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த கோரிக்கைகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் கோரிக்கைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மேட்டுப்பாளையம் நகர்மன்றத் தலைவர் மற்றும் தோழமை சங்கத்தலைவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தொடர்ந்து, தோழமை சங்க நிர்வாகிகள் விவேக், சுதாகர், திருக்குமரன், துரை கருணாநிதி, தாமஸ், நிர்வாக சங்கத்தின் மாநில தலைவர் விஜயகுமார், பொதுச் செயலாளர் அருண், டேனியல், ராஜன்சிங் , நிர்வாக ஊழியர் சங்க முன்னாள் தலைவர் ராஜசேகரன், SC மற்றும் ST வருவாய் துறை சங்க நிர்வாகி தனலட்சுமி, கோவை தனி வட்டாட்சியர் மாலதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்வின் இறுதியில் மாநில செய்தி ஊடக பிரிவு செயலாளர் சிங்கபாண்டி அனைவருக்கும் நன்றி கூறினார்.
தமிழகம் முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 600 க்கும் மேற்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் தங்கும் அறைகள் மற்றும் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு முன்னெடுத்து சென்ற கோவை மாவட்ட தலைவர் ஜெகதீஸ்வரன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ஜெயசந்திரன், மாநில நிர்வாகிகள் அன்பழகன் மகேந்திரன் உள்ளிட்ட கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக நன்றியும், பாராட்டுக்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்…
தேசிய சணல் வாரியம் பெட்கிராட் இணைந்து இலவச ஜூட் பேக் தயாரிப்பதற்கு 50 நாட்கள் பயிற்சி பெற்ற 25 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மதுரை எஸ்.எஸ் காலனியில் உள்ள பெட்கிராட் கூட்டரங்கில், நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். கல்கத்தா தேசிய சணல் வாரிய தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி அய்யப்பன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில் :- பயிற்சிக்கு பின் சுய தொழில் துவங்க அனைத்து முயற்சிகளையும் செய்து வெற்றி பெற வேண்டும்.என பேசினார்.
கே.வி.ஐ.சி உதவி இயக்குனர் அன்புச்செழியன் பேசும்போது :- மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று தொழிலை திறம்பட செய்ய வேண்டும் என கூறினார்.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா முதுநிலை மேலாளர் அமேஷ்குமார் பேசும்போது :- பெண்கள் சுயதொழில் துவங்க மத்திய, மாநில அரசுகள் மானியத்துடன் கடன் வழங்க பரிந்துரை செய்யும் போது அதை பெண்கள் பயன்பெறும் வகையில் முத்ரா லோன் தர தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
நிகழ்ச்சியின் முடிவில் பெட்கிராட் பொருளாளர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் சாராள்ரூபி, துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங், பயிற்சியாளர்கள் விஜயவள்ளி, கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்….
கரூர்: காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான போக்கை பாஜக கைவிடவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. செ.ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.
கரூர் எம்.பி. அலுவலகத்தில் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் இன்று கூறியது: ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, 2 மாதத்துக்கு மேலாக ஊதியம் வழங்கவில்லை. இதனால், கடுமையான பொருளாதார நெருடிக்கடியில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். நாடு முழுவதும் இத்திட்டத்தில் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். இதில் 91 லட்சம் பேர் தொடர்ச்சியாக வேலை செய்து வருகின்றனர்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் 60,000 பயனாளிகள் உள்ளனர். இதில் 25,000 பயனாளிகளை நேரில் சந்தித்துள்ளேன். இதனால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். இதில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கக்கோரி கடந்த செப்.13-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் ஆகியோருக்கு கடிதம் எழுதினேன். இதுவரை பதிலில்லை.
நாடு முழுவதும் உள்ள வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு ஊதியமாக வழங்க மட்டும் ஆண்டுக்கு ரூ.2.10 லட்சம் கோடி செலவாகும். இதுவன்றி அப்பணிகளுக்கும் நிதி தேவை. ஆனால் ரூ.60,000 கோடி மட்டுமே இப்பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021-22ம் நிதியாண்டை விட 18 சதவீதம் குறைவு. மோடி ஆட்சியில் 23 கோடி பேர் வறுமையில் தள்ளப்பட்டனர். மிக வேதனையானது. மத்திய அரசு இதற்கு பதில் தரவேண்டும். உடனடியாக ஊதிய பாக்கியை வழங்கவேண்டும்.
காவிரி கோரிக்கையை கர்நாடகா அரசு ஏற்காதது அநீதியானது. மத்திய நீர்வளத்துறை அமைச்சரை எம்.பிக்கள் சந்தித்தோம் தமிழகத்துக்கு கர்நாடகா அரசு அநீதி இழைக்கிறது. காவிரியில் 12,000 கனஅடி நீர் திறக்கவேண்டும் என்ற நிலையில் 5,000 கன அடி திறக்கவேண்டும் என உத்தரவிடுவது தவறாகும். இது சலுகை அல்ல. உரிமை. தமிழகத்தின் காவிரி கடைமடை வரை விவசாயத்திற்கும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் குடிநீருக்கும் ஆதாரமாக காவிரி உள்ளது. கர்நாடகாவில் 1 டிஎம்சி, 2 டிஎம்சி நீர் தேக்கக்கூடிய சிறு அணைகள் உள்ளன. இவற்றை மத்திய அரசு கருத்தில்கொள்ள வேண்டும். மத்திய அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும்.
காவிரி விவகாரத்தில் பாஜக அரசியல் பிரச்சினையாக இல்லாமல் மனிதாபிமான முறையில் அணுக வேண்டும். தமிழகத்துக்கு எதிரான போக்கை கைவிடவேண்டும். கர்நாடகா அரசு இவ்விகாரத்தில் சட்டப்படி, நியாயப்பட்டி, அரசியல் சாசனப்படி செயல் படவேண்டும்.
டெல்லியில் ஊடகவியலாளர் வீட்டில் அத்துமீறி நுழைந்து லேப்டாப், மொபைல் போன்வற்றை உளவுப் பிரிவினர் கைப்பற்றியுளனர். இவ்விகாரத்தில் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. பாஜக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை அடையப்போகிறது. அதனையொட்டியே இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது” என்றார் ஜோதிமணி. கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மதுரை ஆழ்வார்புரத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர், நடிகர் திலகம் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவும், முன்னாள் பாரத பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாளும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினமும் அறக்கட்டளை அலுவலகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது
பின்னர் காந்தி மியூசியத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதன் பிறகு மதுரை விளக்குத்தூணில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு அவர் நினைவு தினத்தை போற்றி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மீர் பாஷா, மணிமாறன், கே.ஆர்.சுரேஷ் பாபு, பூக்கடை கண்ணன், வீர வாஞ்சிநாதன், மற்றும் வர்த்தக பிரிவு காங்கிரஸ் மாவட்ட தலைவர் வேல்பாண்டி மற்றும் போஸ் கந்தவேல் ராஜா கிருஷ்ணகுமார் பாலமுருகன் கருப்பாயூரணி மாரிக்கனி சரவணன் சரவணராஜ் இளைஞர் காங்கிரஸ் குரு பிரசாத் லெனின் கனகராஜ் முத்துக்குமார் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொண்டாடினர்
அந்த வகையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக வடக்கு மாவட்ட தலைவர் சாமுவேல் என்ற சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கர்ம வீரர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு புதூர் டி.ஆர்.ஓ காலனியில் உள்ள சங்க அலுவலகத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் பிரசில்லா, கணேசன், கார்மேகம் ஜி, சந்திரன், முத்துராஜ், சக்திவேல், லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரையில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பழுதான வேளாண்மை இயந்திரங்களின் சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டனர்
பழுதாகி செயலற்று கிடக்கும் உழவு இயந்திரம், டிராக்டர், துணை கருவிகள், கதிர் மற்றும் கரும்பு அறுவடை இயந்திரங்கள், நடவு இயந்திரங்கள் போன்ற வாகனங்களின் சாவியை மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து டாக்பியா மாவட்ட செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் கூறுகையில் :-
தமிழகத்தில் 4300க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், சுமார் 150 நகர கூட்டுறவு கடன் சங்கங்களும் அடித்தட்டு விவசாய பெருமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு துணை நின்று பயிர்க்கடன், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசன வசதி, நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு, மாற்றுத்திறனாளி கடன்கள் வழங்குவதுடன், உரம் விநியோகம், அத்தியாவசிய பொருட்கள் விநியோகம், பொதுசேவை மையம் என பல்வேறு பணிகளுடன் அரசு அவ்வப்போது அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தையும் நேரம் காலம் பாராது உழைத்து வெற்றிகரமாக செயல்படுத்தி ஏற்கனவே இது பல்நோக்கு சேவை மையங்களாக செயல்பட்டு வருகிறது.
இச்சங்கங்கள் வெற்றிகரமாக செயல்படுத்த இயலாமல் தோல்வியுற்ற ஒரே திட்டம், கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் சேவை மையம் என்ற திட்டமாகும். இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் வாங்கப்பட்ட (திணிக்கப்பட்ட) உழவு இயந்திரம், டிராக்டர், துணைகருவிகள், கதிர் மற்றும் கரும்பு அறுவடை இயந்திரங்கள்,நடவு இயந்திரங்கள் பல லட்சங்களை நட்டப்படுத்தி சங்க வளாகங்களில் பயனற்று துருப்பிடித்து பயன்படுத்த இயலா நிலையில் குவிந்து கிடக்கிறது. இச்சங்கங்களில் சுமார் 18000 பணியாளர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், 7000 பணியாளர்களே பணிபுரிந்து வரும் நிலையில், பல இடங்களில் ஒரே பணியாளர் ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களில் பெரும் பணிச்சுமையுடன் பணியாற்றுவதால் கடன் வசூல், சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் கவனம் செலுத்த இயலாமல் தொய்வு ஏற்பட்டு மன உளைச்சலில் பணிபுரிந்து வரும் நிலை உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே பலமுறை செயல்படுத்தி தோல்வியுற்ற இத்திட்டங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுதல் என்ற திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 1000 கோடி ஒதுக்கி குறீயீட்டை எய்த கூட்டுறவுத் துறையின் அனைத்து நிலை அதிகாரிகளும் மீண்டும் லாரி, டிராக்டர், அறுவடை இயந்திரங்கள், டிரோன், என ஒவ்வொரு சங்கங்கமும் 2 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீட்டில் செயல்படுத்த கட்டாயப்படுத்துகின்றனர்.
இதுகுறித்து தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். சங்கங்களின் எதிர்காலத்தை பற்றி கவலைகொள்ளாமல் கட்டாயப்படுத்துவதை கைவிடக்கோரி கடந்த 25ம் தேதி மண்டல இணைப்பதிவாளர்களிடம் பெருந்திறள் முறையீடு செய்தோம்.
அதன்பின்னரும் தீர்வு காணப்படாததால் இன்று 03.10.2023 முதல் ஏற்கனவே வாங்கப்பட்டுள்ள கருவிகளை மண்டல இணைப்பதிவாளர் அலுவலங்களில் ஒப்படைத்துவிட்டு, இத்திட்டம் கைவிடப்படும் வரை அல்லது ஒழுங்குப்படுத்தப்படும் வரை அனைத்துப்பணியாளர்களும் ஒட்டு மொத்த விடுப்பில் செல்கிறோம்.
இம்மாவட்டத்தில் 170 சங்கங்களும் 500 பணியாளர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம்.
சங்கங்களைக் காக்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு நல்ல தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும். அடுத்தகட்ட போராட்டம் குறித்து மாநில தலைமை முடிவு செய்யும் என கூறினார்.
ஊடகங்கள் மீதான பாரதிய ஜனதா கட்சியின் (BJP) அரசாங்கத்தின் புதிய தாக்குதலை இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) கட்சிகள் கடுமையாகக் கண்டிக்கின்றன. ஊடகங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்காக நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம், நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார், காஷ்மீர் வாலா, தி வயர் போன்றவற்றை ஒடுக்க புலனாய்வு அமைப்புகளை நியமித்து ஊடகங்களை வேண்டுமென்றே அடக்கி ஒடுக்கியது பாஜக அரசு. NewsClick. பிஜேபி அரசாங்கம், ஊடக நிறுவனங்களை க்ரோனி முதலாளிகளால் கையகப்படுத்துவதன் மூலம் ஊடகங்களை தனது கட்சி மற்றும் கருத்தியல் நலன்களுக்கான ஊதுகுழலாக மாற்ற முயற்சிக்கிறது. அரசாங்கமும் அதன் கருத்தியல் ரீதியாக இணைந்த அமைப்புகளும் அதிகாரத்திற்கு உண்மையைப் பேசிய தனிப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மேலும், தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 போன்ற பிற்போக்குத்தனமான கொள்கைகளையும் பாஜக அரசாங்கம் முன்னெடுத்துச் சென்றுள்ளது, இது ஊடகங்களை புறநிலையாக அறிக்கையிடுவதைக் கட்டுப்படுத்துகிறது. இப்படிச் செய்வதன் மூலம், பா.ஜ.க. தனது தவறுகளையும், கமிஷன் பாவங்களையும் இந்திய மக்களிடம் இருந்து மறைக்கவில்லை. முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடாக இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாட்டை இது சமரசம் செய்கிறது.
பாஜக அரசாங்கத்தின் நிர்ப்பந்த நடவடிக்கைகள் எப்போதும் அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசும் ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது மட்டுமே இயக்கப்படுகின்றன. முரண்பாடாக, தேசத்தில் வெறுப்பையும் பிரிவினையையும் தூண்டும் ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாஜக அரசு முடங்கிக் கிடக்கிறது. தேசிய நலன் கருதி, தேசம் மற்றும் மக்கள் அக்கறையுள்ள உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதும், அதன் தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப ஊடகங்களைத் தாக்குவதை நிறுத்துவதும் பிஜேபி அரசுக்குத் தேவை.
எனது நாடாளுமன்றத் தொகுதியான கரூரில் உள்ள MGNREGA தளங்களுக்குச் சென்று தற்போது நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். எனது வருகைகளின் போது, அனைத்து MGNREGA ஊழியர்களுடனும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடந்த 8 வாரங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்வது எனது கவனத்திற்கு வந்துள்ளது. கிராமப்புறங்களில் ஏழ்மையான விவசாயப் பின்னணியில் இருந்து வந்த இந்தத் தொழிலாளர்கள், இந்தத் தொழிலை மட்டுமே நம்பி வாழ்கின்றனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்ட MGNREGA சட்டத்தின் நோக்கம் கிராமப்புற மக்களை ஆதரிப்பதே என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவது மிகவும் முக்கியமானது. UPA ஆட்சியின் போது, வேலை செய்யும் இடத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம் உடனடியாக வழங்கப்பட்டது, இதனால் தொழிலாளர்கள் உள்ளூர் சந்தைகளை அணுகவும் மளிகை பொருட்களை வாங்கவும் உதவியது.
தற்போதைய 8 வார தாமதம், குறிப்பாக கிராமப்புற குடும்பங்களில் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. MGNREGA க்கான பட்ஜெட் ஒதுக்கீடு 60,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டு ஒதுக்கீட்டை விட 18% குறைவாக உள்ளது என்பதையும் நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். இது உண்மையான தேவையான 2,10,000 கோடியில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே. இந்த குறைப்பு ஊதியம் வழங்குவதில் தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம். ஊதியத்தை உடனடியாக வழங்கவும், ஒதுக்கீட்டை 2,10,000 கோடியாக உயர்த்தவும் பரிசீலிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கொடுப்பனவுகளின் குறைப்பு கடுமையான வறுமை மற்றும் பசிக்கு வழிவகுக்கும், குறிப்பாக குழந்தைகள் மத்தியில். தற்போதைய ஆட்சியின் கீழ் 2014 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 23 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் நழுவியுள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் MGNREGA தொழிலாளர்களுக்கு 8 வாரங்களாக ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது அவர்களின் துயரத்தை அதிகப்படுத்துகிறது.
MGNREGA க்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதையும், திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஊதியங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதையும் தயவுசெய்து உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இத்திட்டம் நமது கிராமங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது எனவே இப்பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
இப்படிக்கு, செ.ஜோதிமணி கருர் நாடாளுமன்ற உறுப்பினர்.