Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 87)

செய்திகள்

All News

சங்கர் சிமெண்ட் 75-வது ஆண்டு பவள விழாவில் மதுரை ரமேஷ் ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் பங்கேற்பு.!

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சங்கர் சிமெண்ட் 75-வது ஆண்டு பவள விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் அவர்கள் வரவேற்று பேசினார்.

இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் எல்.முருகன், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழக முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கிரிக்கெட் வீரர் தோனி உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


இவ்விழாவில் சங்கர் சிமெண்ட் மதுரை நம்பர் ஒன் ஸ்டாக்கிஸ்ட் ரமேஷ் ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் அவர்கள் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக சென்னை செய்தியாளர் குமார்

மதுரையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் மூர்த்திக்கு விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு.!

மதுரை விமான நிலையம் சாலை நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் முழு உருவ வெங்கல சிலையை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அன்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி அவர்கள் தலைமையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.

பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து இந்த விழாவில் கலந்து கொள்ள திருமாவளவன் எம்.பி அழைப்பு விடுத்தார். அருகில் இரா அய்யங்காளை உள்ளார்.

மதுரையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் மூர்த்திக்கு விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு.!

மதுரை விமான நிலையம் சாலை நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் முழு உருவ வெங்கல சிலையை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அன்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி அவர்கள் தலைமையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.


பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து இந்த விழாவில் கலந்து கொள்ள திருமாவளவன் எம்.பி அழைப்பு விடுத்தார். அருகில் இரா அய்யங்காளை உள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இதில் விவசாய அணி முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ்,மாநில திட்ட பொறுப்பாளர் அழகுராஜா, செல்லம்பட்டி ஒன்றியம் தாமோதரன், விவசாய அணி பொறுப்பாளர் கலைச்செல்வன், சேடப்பட்டி ஒன்றியம் ராமசாமி, முனியாண்டி, சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மல்லிகை லயன்ஸ் சங்கம் சார்பாக இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் பொதும்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு
மதுரை மல்லிகை லயன்ஸ் சங்கத்தின் சார்பாக இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார தலைவர் லயன் K.M.முருகன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் லயன் பாலமுருகன், செயலாளர் லயன் வீரக்குமார், லயன் விஜயேந்திரன்,லயன் வெற்றிமுருகன் லயன் பழனிமுருகன் லயன் நாகூர் ஹனிபா மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

திண்டுக்கல் ஸ்ரீ நலம் மருத்துவமனை மற்றும் சாரா மெடிக்கல் இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்.!

திண்டுக்கல் மாவட்டம் இடைய கோட்டை முஹையதீன் ஆண்டவர் மஹாலில் ஸ்ரீ நலம் மருத்துவமனையின் தலைமை எலும்பியல் மருத்துவர் சிவகுமார் தலைமையில் மாபெரும் எலும்பியல் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டனர்.

கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் சிறப்பான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டது.

இந்த முகாமில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், ஊர் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள்,
போன்றோர் பங்கேற்றனர்.

மருத்துவர் சிவகுமார் உடன், மருத்துவர்கள் சதாம் ஹுசைன், கோபி கிருஷாணா ராஜா, முகம்மது ரியாஸ்,ஆஷிகா பாபு, முகம்மது அம்ரின் ஆகிய மருத்துவ குழுவினர் பங்கேற்று சிறப்பான ஆலோசனைகள் வழங்கினர்.

ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வரும் திண்டுக்கல் ஸ்ரீ நலம் ஆர்த்தோ மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சிவகுமார் அவர்களை பங்கேற்ற அனைத்து தரப்பினரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.

அமைதி மனித வள சபையின் தமிழ்நாட்டின் மருத்துவத்துறை தலைவராக டாக்டர் கஜேந்திரன் நியமனம்.!!

நாகர்கோவிலில் அமைதி மனிதவள சபை முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நிறுவனர் ஜெபராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது அமைதி மனித வள சபையின் தமிழ்நாட்டின் மருத்துவத்துறை தலைவராக டாக்டர் கஜேந்திரன் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. மருத்துவ தலைவராக நியமிக்கப்பட்டதற்கான சான்றிதழை நிறுவனர் ஜெபராஜ் மற்றும் தமிழக NGO கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் ஆகியோர்
வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் தலைமை செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட்ராஜ், தமிழக கல்வித்துறை சஜீ, மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏசுநேசன், தமிழக மருத்துவ துறை தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநில துணைத்தலைவர் டாக்டர் முருகேசன்,மாநில செயலாளர் டாக்டர் முத்துக்குமார், மாநில பொருளாளர் டாக்டர் வீரலட்சுமி, மாநில துணைச் செயலாளர் மருத்துவர் குருலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரமேஷ், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கண்ணன், சட்ட ஆலோசகர் ராபின்சன்,
மாநிலச் செயலாளர் ஸ்டீபன், கிரேஸ் சாரிடபிள் டிரஸ்ட் ஜாய்ஸ் மேரி, சேவை செம்மல் ராணி, தலைமை சட்ட ஆலோசகர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் தென் தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நன்றியுரை கூறினார்.

மதுரையில் அதிமுக மாநகர் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பாண்டிச்செல்வி ஞானசேகரன் பேத்தி A.ரதியின் பிறந்தநாள் விழாவில் செல்லூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்று வாழ்த்து.!

மதுரை தேம்பாவணியில்
மத்திய 2-ம் பகுதி அதிமுக செயலாளர் ஞானசேகரன் மற்றும் மாநகர் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பாண்டிச்செல்வி ஞானசேகரன் ஆகியோரின் பேத்தி A.ரதியின் 11-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.


இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட கழக செயலாளர், அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ பங்கேற்று குழந்தை செல்வம் A.ரதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார்.

இவ்விழாவில் பகுதி, வார்டு, சார்பு அணியினர், மகளிரணி நிர்வாகிகள் உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாஜக விவசாய அணி மதுரை மேற்கு மாவட்ட தலைவராக முத்துப்பாண்டி நியமனம்.!


பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மதுரை மேற்கு மாவட்ட தலைவராக முத்துப்பாண்டி அவர்களை விவசாய அணி மாநில தலைவர் சி.கே நாகராஜன் நியமனம் செய்துள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுடைய ஆலோசனையின் படியும், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாவட்ட தலைவர் சசிகுமார் அவர்களுடனான கலந்தாய்வின்படியும், முத்துப்பாண்டி அவர்களை மதுரை மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவராக நியமனம் செய்கிறேன்.அவர் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட முத்துப்பாண்டி அவர்களுக்கு பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் வ.உ.சி எழுச்சி பேரவை மணிநகரம் சார்பாக, மாவட்ட தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் ஐஸ்.ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 86-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்து அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

அந்த வகையில் மணிநகரம் வ.உ.சி எழுச்சி பேரவை சார்பாக, மாவட்டத் தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் ஐஸ்.ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES