Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / அமைதி மனித வள சபையின் தமிழ்நாட்டின் மருத்துவத்துறை தலைவராக டாக்டர் கஜேந்திரன் நியமனம்.!!
NKBB Technologies

அமைதி மனித வள சபையின் தமிழ்நாட்டின் மருத்துவத்துறை தலைவராக டாக்டர் கஜேந்திரன் நியமனம்.!!

நாகர்கோவிலில் அமைதி மனிதவள சபை முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நிறுவனர் ஜெபராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது அமைதி மனித வள சபையின் தமிழ்நாட்டின் மருத்துவத்துறை தலைவராக டாக்டர் கஜேந்திரன் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. மருத்துவ தலைவராக நியமிக்கப்பட்டதற்கான சான்றிதழை நிறுவனர் ஜெபராஜ் மற்றும் தமிழக NGO கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் ஆகியோர்
வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் தலைமை செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட்ராஜ், தமிழக கல்வித்துறை சஜீ, மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏசுநேசன், தமிழக மருத்துவ துறை தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநில துணைத்தலைவர் டாக்டர் முருகேசன்,மாநில செயலாளர் டாக்டர் முத்துக்குமார், மாநில பொருளாளர் டாக்டர் வீரலட்சுமி, மாநில துணைச் செயலாளர் மருத்துவர் குருலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரமேஷ், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கண்ணன், சட்ட ஆலோசகர் ராபின்சன்,
மாநிலச் செயலாளர் ஸ்டீபன், கிரேஸ் சாரிடபிள் டிரஸ்ட் ஜாய்ஸ் மேரி, சேவை செம்மல் ராணி, தலைமை சட்ட ஆலோசகர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் தென் தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நன்றியுரை கூறினார்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES