
இதில் மாநில இளைஞரணி துணைத்தலைவர் U.A.செந்தில்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



தேவர் ஜெயந்தி முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு இந்து முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலாளர் கலாநிதி மாறன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் ராஜாமதன், மாவட்ட செயலாளர்கள் செல்வகுமார், சதீஷ்குமார், பாண்டிபிடாரன், செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், சண்முகவேல், எஸ்.எஸ் காலனி ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலுர் இப்ராஹிம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், சிறுபான்மையினர் அணி மாநில பொது செயலாளர் கல்வாரி தியாகராஜன், மாநில செயலாளர் சாம் சரவணன் , தல்லாகுளம் மண்டல் தலைவர் அருண் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்


இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக மதிப்பிற்குரிய திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், மதிப்பிற்குரிய அன்னை திருமிகு. சோனியா காந்தி,தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் முன்னிலையில் பதவியேற்ற நிகழ்வில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழு உறுப்பினர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. செ. ஜோதிமணி அவர்கள் பங்கேற்றார்.
