Sunday , December 21 2025
Breaking News
Home / செய்திகள் (page 15)

செய்திகள்

All News

முழு நாடும் உங்களுடன் நிற்கிறது: வினேஷ் போகத்துக்கு ராகுல் ஆறுதல்

முழு நாடும் உங்களுடன் நிற்கிறது: வினேஷ் போகத்துக்கு ராகுல் ஆறுதல்

புது தில்லி: முழு நாடும் உங்களுடன் நிற்கிறது என்று இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறியிருக்கிறார்.

பாரீஸ் ஒலிம்பிக், மகளிருக்கான மல்யுத்தப் போட்டியல், 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் அமைப்பு அறிவித்தது.

50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட வேண்டிய வீராங்கனை, கூடுதலாக 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்திருந்தது இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தனது ஆதரவை அளிக்கும் வகையில், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், உலக சாம்பியன்களான மல்யுத்த வீராங்கனைகளை தோற்கடித்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று நாட்டுக்கு பெருமைசேர்த்த நிலையில், அவர் சில காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

ஒலிம்பிக் அமைப்பின் இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மனம் தளரக்கூடியவர் அல்ல என்பது தெரியும், அவர் இன்னும் வலுவாக களம் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

வினேஷ் போகத், நீங்கள் எப்போதும் நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். இன்றும் உங்கள் பலமாக முழு நாடும் உங்களுடன் நிற்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் மகளிருக்கான மல்யுத்தப் போட்டி 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் வருத்தத்தை அளிக்கிறது, இரவு முழுவதும் இந்தியக் குழுவினர் எடுத்த கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும், இன்று காலை 50 கிலோவுக்கும் கூடுதலாக சில கிராம் எடை கூடியிருக்கிறது. இது குறித்து இந்திய குழு வேறு எந்த கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளவில்லை. வினேஷ் போகத்தின் தனியுரிமையை மதிக்குமாறு இந்திய குழு கேட்டுக்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்’ -மக்களவையில் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தல்!

'வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்'  -மக்களவையில் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தல்!

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நிலச்சரிவால் குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு மட்டுமல்லாது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கும் மாநில அரசு சார்பில் மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பலரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இதனை தேசிய பேரிடர் அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வி.முரளீதரன் ஃபேஸ்புக்கில் ஆக. 4ம் தேதி வெளியிட்ட பதிவில் வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மீண்டும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் இன்று வலியுறுத்தினார். மேலும், நிலச்சரிவால் தங்களது உடைமைகள் மற்றும் வீடுகளை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும். வயநாடு நிலச்சரிவு பதிப்பு குறித்து உறுதுணையாக ஆதரவளித்து அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி. எனவும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (07.08.2024) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திமுகழகம் சார்பில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கலைஞர் செயலாற்றிய திட்டங்களால் பயன்பெற்ற பல்வேறு தரப்பினரும் தங்கள் நன்றியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கலைஞரின் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களையெல்லாம் பட்டியலிட்டு – அதன் வரலாற்றைச் சொன்னால், தலைவர் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும். ஆறாத வடுவென – ஆற்றுப்படுத்த முடியாத துயரென அவர் நம்மைப் பிரிந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ஆறு. இந்நாளில் அண்ணனின் அருகில் அவர் ஓய்வுகொண்டிருக்கும் கடற்கரைக்கு உடன்பிறப்புகள் சென்று, “அவர் காட்டிய வழிதனில் – அவர் கட்டிய படை பீடுநடை போடும்; தமிழும் தமிழ்நாடும் அவனிதனில் உயர்ந்து விளங்கப் பாடுபடும்!” என உறுதியெடுத்து உரமூட்டிக் கொண்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘எனக்காக அழகான காலணிகளை அனுப்பியுள்ளீர்கள்’.. காலணி தைத்து அனுப்பிய தொழிலாளிக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!!

'எனக்காக அழகான காலணிகளை அனுப்பியுள்ளீர்கள்'.. காலணி தைத்து அனுப்பிய தொழிலாளிக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!!

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அழகிய காலணிகளை தைத்து அனுப்பிய தொழிலாளி ராம்சேட்டுக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா். இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 26ம் தேதி சுல்தான்பூருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.

அப்போது சுல்தான்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டை சந்தித்து பேசினார். அவரின் வேலைகள் அன்றாடம் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து அவரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார். இதனைக் கேட்ட ராகுல் காந்தி அந்த தொழிலாளிக்கு உதவ எண்ணினார். அதன்படி அவருக்கு புதிதாக தையல் மெஷின் ஒன்றை பரிசாக மறுநாள் வழங்கி உள்ளார். இதனை கண்ட அந்த தொழிலாளியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. இதைத் தொடர்ந்து அவர் மகிழ்ச்சியில் இனி கைகளில் செருப்புகளை தைக்க தேவை இல்லை என்று கூறினார். மேலும் அவரிடம் உரையாடிய ராகுல் காந்தி, செருப்பு தைக்கவும் கற்றுக் கொண்டார்.

இதையடுத்து, ராகுல் காந்தி தனது கைகளால் தைத்த காலணிகளை ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் தரப்போவதில்லை என்று தெரிவித்து இருந்த ராம்சேட் என்ற ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்தார். ராம்சேட் பாசமாக அனுப்பிய காலணிகளை ராகுல் காந்தி அணிந்து கொண்டுள்ளார். எனக்காக அழகான காலணிகளை தைத்து அனுப்பியுள்ளீர்கள் என தொலைபேசி வாயிலாக அவருக்கு ராகுல்காந்தி நன்றி ராம்சேட்டுக்கு நன்றி கூறி உற்சாகமாக உரையாடினார்.

இந்த நெகிழ்ச்சியான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி;

உழைக்கும் குடும்பங்களின் ‘பாரம்பரிய திறன்களில்’ இந்தியாவின் மிகப்பெரிய செல்வம் உள்ளது.

சமீபத்தில், சுல்தான்பூரில் இருந்து திரும்பும் போது, ​​ஷூ கைவினைஞர் ராம்செட் ஜியை சந்தித்தேன், அவர் தனது சொந்த கைகளால் செய்யப்பட்ட மிகவும் வசதியான மற்றும் சிறந்த ஷூவை எனக்கு அன்புடன் அனுப்பினார்.

நாட்டின் மூலை முடுக்கிலும் பல்வேறு திறமைகளைக் கொண்ட கோடிக்கணக்கான திறமைசாலிகள் உள்ளனர். இந்த ‘பில்டர்ஸ் ஆஃப் இந்தியா’ அவர்களுக்குத் தேவையான ஆதரவைப் பெற்றால், அவர்கள் தங்கள் சொந்த விதியை மட்டுமல்ல, நாட்டின் விதியையும் மாற்ற முடியும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் திடீர் போராட்டத்தை நடத்தினர்.

ஆயுள் காப்பீடு மீதான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை திருப்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.

மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

ஒரு நபர் தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நோ்ந்தால், தனது குடும்பத்தினா் பொருளாதார ரீதியாக கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவே ஆயுள் காப்பீடு எடுப்பதாகவும், அதற்கு செலுத்தும் பிரீமியம் தொகையில் 18 சதவீதம் அரசுக்கு வரியாக செலுத்தினால் இது குடும்பங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்றும், எனவே ஆயுள் காப்பீடு மீதான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை திருப்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது.

அதேபோல், ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரிமீயம் தொகை மீது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியை (சரக்கு-சேவை வரி) ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி முன்னதாக கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் தலைமையில் தொடங்கியது மாநில திட்டக்குழுவின் 5வது கூட்டம்..

முதல்வர் தலைமையில் தொடங்கியது மாநில திட்டக்குழுவின் 5வது கூட்டம்..

தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் 5வது கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசை பொருத்தவரையில் தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கான கொள்கைகளை வகுப்பது, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை நடத்துவது, திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதில் திட்டக்குழுவின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மாநில திட்ட குழுவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைவராக இருந்து வருகிறார். துணை தலைவராக பொருளாளர் ஜெயரஞ்சன் , முழு நேர உறுப்பினர்கள் மற்றும் பகுதிநேர உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் மாநிலத்திட்ட குழுவின் ஐந்தாவது கூட்டமானது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, மாநில வளர்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட நிர்வாகக் கொள்கை, சுற்றுலாக் கொள்கை உள்ளிட்ட 11 கொள்கைகளின் நிலைகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்ததா என்பது தொடர்பான ஆய்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. திட்ட குழுவானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு 11 கொள்கை அறிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அந்த 11 அறிக்கைகள் தொடர்பான ஆய்வறிக்கைகள், நடத்தப்பட்ட பயிலரங்கங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மாநில திட்டக்குழுவானது, தமிழ் மொழி கலை – கலாச்சாரம் கொள்கை, வேலைவாய்ப்பு கொள்கை, பயிர் மேலாண்மை கொள்கை, கழிவு மேலாண்மை கொள்கை, நிலையான நிலப் பண்பாட்டுக் கொள்கை, தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை கொள்கை, வீட்டு வசதி கொள்கை உள்ளிட்ட ஆறு கொள்கைகளை தயாரித்து வருகிறது. இந்த கொள்கைகள் இறுதி செய்வது தொடர்பாகவும் இந்த திட்டக் குழுவில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக திட்டக்குழுவால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு பணிகள் மற்றும் கொள்கைகள் தமிழக அரசில் எவ்வாறு எதிரொலித்தது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக உரையாற்றுகிறார்.

அதிர்ச்சி… கேரளாவில் மேலும் 4 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் உறுதி!

அதிர்ச்சி... கேரளாவில் மேலும் 4 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் உறுதி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அதே குளத்தில் குளித்த மேலும் 4 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களில் ஒருவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறையினர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிளவரதலா பகுதியைச் சேர்ந்த அனீஷ் (26), பூதம்கோட்டைச் சேர்ந்த அச்சு (25), பூதம்கோட்டை அடுத்துள்ள ஹரிஷ் (27), போதி நகரைச் சேர்ந்த தனுஷ் (26) ஆகியோர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதில், அனீஷுக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இதே போன்ற அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கன்னரவில பூதம்கோடு அனுலால் பவனைச் சேர்ந்த அகில் என்கிற அப்பு (27) கடந்த ஜூலை 23ம் தேதி மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாஅர். அவர் உயிரிழப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் இருந்தது. முதலில் தனது வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றார். அவருக்கு கடுமையான தலைவலி இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் அகில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அப்போது அவருக்கு கோலஞ்சேரி மலங்கரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கும் தலைவலிக்கும் தொடர்பிருக்கிறதா என பரிசோதிக்க, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தது

வயநாட்டில் 8-வது நாளாக மீட்புப்பணி: பலி எண்ணிக்கை 406 ஆக உயர்வு!

வயநாட்டில் 8-வது நாளாக மீட்புப்பணி: பலி எண்ணிக்கை 406 ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 406 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து 8வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.சுமார் 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து 8வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மண்ணில் புதையுண்டவா்களின் உடல்களை மோப்ப நாய்கள், மனிதர்களை மீட்கும் ரேடார், ஜிபிஎஸ் தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 406 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 187 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மட்டுமின்றி ஆறுகளிலும் சடலங்களை தேடி வருகின்றனர். நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள புதுமலையில் அடையாளம் தெரியாத 29 உடல்கள், 184 உடல்பாகங்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. சூச்சிப்பாறை பள்ளத்தாக்கு பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி துவங்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஆயுள் காப்பீடு சேவைகளுக்கான ஜிஎஸ்டி-யை தனது ‘மீட்பு பட்ஜெட்டில்’ உயர்த்தியுள்ளது மோடி அரசு. இந்த வசதிகளுக்கு இது பொது மக்களுக்கு அதிக செலவாகும்.

புது டெல்லி: மோடி அரசின் இந்த மீட்பை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்.

வங்கதேச விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் ராகுல் பங்கேற்பு!

வங்கதேச விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் ராகுல் பங்கேற்பு!

வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்து வருகிறார்.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்துவிட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்தார்.

அவரை நேரில் சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வங்கதேச நிலவரம் குறித்து ஹசீனாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.வங்கி மோசடி: இறந்ததாக அறிவிக்கப்பட்டவர் 20 ஆண்டுகளுக்குப் பின் கைது!

இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அமைச்சர்கள் நேற்றிரவு ஆலோசனை செய்தனர்.

இந்த நிலையில், தில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் வங்கதேச நிலவரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்திய – வங்கதேச எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வங்கதேச அரசியல் சூழல், ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்தது உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கத்தை ஜெய்சங்கர் அளித்து வருகிறார்.

இந்தக் கூட்டத்தில் திமுகவின் டி.ஆர். பாலு, காங்கிரஸின் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) சுப்ரியா சுலே உள்ளிட்ட பிற கட்சிகளின் எம்பிக்களும் பங்கேற்றுள்ளனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES