இன்று காலை (28.8.21) தஞ்சை மாவட்டம் ரயில் நிலையம் பகுதி வியாபாரி ஒருவர் மாவட்ட மகளீர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இப் பகுதியில் 19 வயது கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாதுகாப்பற்ற நிலையில் சுற்றி வாருவதாக தகவல் தெரிவித்தார், இத்தகவலை அடுத்து அப்பகுதிக்கு ஆய்வாளர் சந்திரா அவர்களின் தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று மனநலம் பாதிக்கப்பட்ட அவ் இளம் பெண்ணை மீட்டு மகளீர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அப்பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர், மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் குறித்து எவருக்கேனும் தகவல் தெரிந்தால் தஞ்சை மாவட்ட மகளீர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரா அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு (70100 87778) தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் எலக்டீரிசன்னாக பணி செய்து வந்த லெனின் இட் பிராங்க்ளின் என்பவர் இன்று (28.8.21) காலை 10 மணி வரை விடுதியின் அறைக் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் மருத்துவ கல்லூரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார், இத்தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த ஆய்வாளர் பிராங்க்ளின் உட்ரோ வில்சன் அவர்களின் தலைமையிலான காவலர்கள் அறைக் கதவை திறந்து பார்த்த போது அறையில் தங்கி இருந்த லெனின் இட் பிராங்க்ளின் சுவற்றில் சாய்ந்த நிலையில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது கொலையா?, தற்கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Karthikgovin@Clubhouse is the landing page for Karthikeyan Govindarajan in Clubhouse.
The objective of this landing page is to give an integrated approach to connect Clubhouse and Linktree users with a trusted source for commercial business communication in the name of Clubkadai.
Clubhouse, கிளப் ஹவுஸ் என்னும் சமூக ஊடகத்தளம் தற்போது அதிக அளவில் உலகத் தமிழர்களிடம் பிரபலமாகிவருகிறது.
உலகத்தமிழர்கள் கிளப் ஹவுஸ் தளத்தில் தங்களின் பொன்னான நேரத்தை நமது சமூகத்தின் நலனுக்காக அர்ப்பணித்து வருகின்றனர்.
சமூக முடக்கத்தால் பொருளாதாரத்தை இழந்து நிற்கும் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு வரும் 2021 ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு சமூக ஊடக பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பங்குபெற +918111001899 என்கிற எண்ணுக்கு கிளப் கடை என்று வாட்சப் செய்யவும்.
தஞ்சாவூர் மாவட்டம் காவல் டுடே நிருபர்கள் குழு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த பொழுது தஞ்சை மாவட்ட கௌரவத் தலைவர் தலைமையில் மதிப்பிற்குரிய திரு. K.N சுப்பையன் மற்றும் தஞ்சை மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ் B.SC தஞ்சை மாவட்ட தாலுகா ரிப்போட்டர் M.பால்வாசகம் மற்றும் பேராவூரணி தாலுக்கா ரிப்போட்டர் S.இளையராஜா.
நேற்று தஞ்சை நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக திரு கபிலன் ஐயா பதவி ஏற்றுக் கொண்டார். தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நேரடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றது இதுவே முதன்முறை ஆகும் என்பது தஞ்சைக்கு சிறப்பு அம்சமாக இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அவசர அவசரமாக நாட்டை விட்டு ஓடி விமானத்தில் பறந்து விட்டார். இந்த இக்கட்டான சூழலில் நாட்டின் அதிபர் மக்கள் உயிர் காக்க நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் தான் மட்டும் முண்டியடித்துக் கொண்டு தப்பி இருப்பது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர் பயத்தின் காரணமாக அங்கிருந்து வெளியேறும் முயற்சியில் காபூல் விமான நிலையத்தில் இரவு பகலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் அதன் தூதரக அதிகாரிகள் மற்றும் மக்களை அங்கிருந்து அவரவர் தாயகம் அழைத்து வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், ஆனால் அனைத்து விமானங்களும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர் தலிபான்கள். இது குறித்து செய்தி தொடர்பாளர் போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தாங்கள் சர்வதேச நாடுகளுடன் அமைதியான முறையில் நல்ல பந்தத்தை தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்று அறிவித்து விட்ட போதிலும் தலிபான்கள் ஆக்ரோஷமாக திரியும் அவர்களை கண்டு அஞ்சி நடுங்கி கொண்டிருக்கின்றனர்.
மக்களை காப்பாற்ற வேண்டிய ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தாலிபன்கள் வருவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகின்றது. காப்பாற்ற வேண்டிய அரசு தங்களை கைவிட்டுவிட்ட நிலையில் நெருக்கடியான நிலையில் தாலிபான்களால் எந்த நேரமும் தங்களுக்கு எதுவும் நேரலாம் என்று பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே 100க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள், அரசு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர், யாரையும் கொல்ல மாட்டோம் மக்கள் தங்கள் உடமைகளை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று தலிபான் செய்தி தொடர்பாளர் சார்பில் நேற்று மாலை உத்தரவாதம் அளித்தார், இருப்பினும் தலைநகர் காபூல் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் பொது மக்கள் தாலிபான்களுக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அதேபோல் ஆயிரக்கணக்கான மக்கள் வங்கிகளில் மிக நீண்ட வரிசையில் காத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அதிலிருந்து வெளியேற முனைப்பு காட்டி வருகின்றனர்.
ஆனால் தாலிபன்கள் பொதுமக்களிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் அமைதியான முறையிலேயே நகரங்களை கைப்பற்றி இருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் பலவும் தெரிவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் கையில் முழுமையாகச் சென்று விட்ட நிலைமை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க அமெரிக்கா அரசு அவசர கூட்டத்தை கூட்டியது.கடந்த சில தினங்களில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்கா தனது படைகளை மீண்டும் அதிகப்படுத்தினால் இருதரப்பு மோதல் ஏற்படலாம் என்று தெரிகிறது.
யார் இந்த தலிபான்கள்?
தலிபான் எனப்படுவோர் ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த சுணி இஸ்லாமிய தேசியவாத அமைப்பாகும். 2001 இல் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் உதவியுடன் இவ்வமைப்பின் தலைவர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர். அடிப்படைவாத தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் “தலிபான்” பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் நேட்டோ படைகளுக்கெதிராகவும் கெரில்லா முறையில் போரிட்டு வருகிறது.
தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஓமார் ஆவார். தலிபானின் படைகளில் பெரும்பாலானோர் தெற்கு ஆப்கானிஸ்தானிலும் மேற்கு பாகிஸ்தானிலும் உள்ள பாஷ்டன் மக்கள் ஆவார். இவர்களைவிட சிறிய அளவில் ஐரோப்பா மற்றும் சீனாவைச் சேர்ந்த தீவிரவாதிகளும் இவ்வமைப்பில் உள்ளனர். தலிபான் பாகிஸ்தான் அரசிடம் இருந்து இராணுவப் பயிற்சிகளையும் பெருமளவு இராணுவத் தளவாடங்களையும் பெற்றனர்.
குறிப்பு : பெண்கள் கல்விக்கு எதிர்ப்பாளர்களான இவர்கள் பெண்கள் படிக்கும் கல்லூரி,மற்றும் பள்ளிகளில் அமைந்துல்ள நீர்தொட்டியில் விசத்தைக் கலந்தும், பள்ளியின் வகுப்பறையில் விச வாயுவை தெளித்தும் பெண்கள் கல்வியை அழிக்கப்பார்க்கிறார்கள்.
தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட நகர் நல அலுவலர் டாக்டர் திரு. லட்சிய வர்ணா அவர்களுக்கு தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் மாநில தலைவர் ப.ஹரிஹரன் நினைவு பரிசு வழங்கியபோது மாநில பொருளாளர் சரித்திரம் பிரபு, மண்டலச் செயலாளர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் மோகன் கணேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் பாண்டியன், செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட செய்தி தொடர்பு உதயகுமார் ஆகியோர் உடனிருந்து வழங்கினர்.
Following the launch of the first Thirukkural Ani (ABCmatrix) conference with Riyadh Tamil Sangam, OrangeTamil is inviting participants for the world’s first Tamil Olympiad based on Thirukkural in multiple languages.
OrangeTamil team is happy to introduce location-based sponsors who are onboarding gift coupons for the winners in different levels.
Delta Foods Thanjavur is pleased to give 500 rupees gift coupons for their products from their leading outlets in Thanjavur.
Email your name, class of study, age to OrangeTamil.com@Gmail.com to enroll in this competition.
ஆரஞ்ச் தமிழ் டாட் காம் வலையொளி வழியாக ஒலிபரப்பப்படும். 2.பன்னாட்டளவில் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள். 3.தலைப்புக்கேற்ற பொருண்மையில் மட்டுமே பேசவேண்டும். 4.மூன்று நிமிடங்கள் உங்களுக்கானது.. தமிழ் வணக்கம் அவை வணக்கம் எடுத்தல்,தொடுத்தல், முடித்தல்,நன்றி என்ற முறையில் உங்கள் பேச்சு இருத்தல் வேண்டும். 5.உலக அளவில் சென்று சேர்வதால் அரசியல் கலக்கக் கூடாது.தலைவர்களின் பெயர் உச்சரிக்க வேண்டிய இடம் வரும்போது மதிப்பு மிகு சொற்களை பயன்படுத்த வேண்டும்.உண்மைக்கு புறம்பான சொற்களை தவிர்க்க வேண்டும்.இந்தியாவின் பெருமைகளைப் பறைசாற்றுவதாக மட்டும் இருத்தல் வேண்டும். 6.பேச்சரங்கத்திற்கான குவியம் (ZOOM ) அனுப்பப்படும். 7.உங்கள் பெயர் அழைக்கப்படும் போது ஒலி,ஒளி வாங்கியினைத் திறந்து பேசுங்கள். 8.இணைய அவை ,உடை நாகரிகங்கள் கடைபிடிக்க வேண்டும். 9..உங்கள் பெயரினையும் மாவட்டத்தினையும் மட்டும் இங்கே குறிப்பிடுங்கள். 10.பதிவுக் கட்டணம் இல்லை 11.பங்கேற்பாளர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும். வாழ்த்துகள்🙏🙏💐💐💐💐💐