
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ஜான், கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



விலைவாசி உயர்வு சட்ட ஒழுங்கு சீர்கேட்டினை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் அதிமுக கழக அமைப்பு செயலாளர், நாகை மாவட்ட கழக செயலாளர் ஓ.எஸ்.மணியன் MLA., மற்றும் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் Ex MLA., ஆகியோர் அறிவுறுத்தலின்படி கொள்ளிடம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.சிவக்குமார் தலைமையிலும் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.எம்.நற்குணன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ம.சக்தி, மாவட்டம் மீனவர் அணி செயலாளர் ஜி.நாகரத்தினம், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வேட்டங்குடி சீனிவாசன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்
நிகழ்வில் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் முனைவர் மாதாணம் சத்தியமூர்த்தி, ஒன்றிய அவைத்தலைவர்கள் எம்.எஸ்.ராஜேந்திரன் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, மற்றும் பொறுப்பாளர்கள் சொக்கலிங்கம் பாஸ்கரன், இனியன், வக்கீல் ரவி, பாலதண்டாயுதம், செந்தில்குமார், கருணாகரன், காட்டூர் வடிவேல், சந்திரசேகர் விக்னேஸ்வரன், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக திரைப்பட துணை நடிகர்- நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரை காந்தி மியூசியத்தில் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழா மற்றும் “மதுரையை கலக்க போவது யாரு” நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்கான டிக்கெட்டை தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வக்குமார் அவர்களிடம் சங்கத்தலைவர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது வடக்கு மாவட்ட செயலாளர் சின்னசாமி, மாவட்ட இணைச்செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டபிரபு, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கம் வடக்கு தொகுதி செயலாளர் ஜெயப்பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்…

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்




