Tuesday , July 29 2025
Breaking News
Home / தமிழகம் / கரூர் அருகே மருதூர் பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடப்பட்டது
NKBB Technologies

கரூர் அருகே மருதூர் பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடப்பட்டது

கரூர் அருகே மருதூர் பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடப்பட்டது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் ஆணைப்படி ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் பணிக்கம்பட்டி முதல் நடுப்பட்டி வரையிலான வாய்க்காலின் கரையோரங்களில் மரக்கன்றுகள் மட்டும் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் துரைசாமி நினைவு ஐ.டி.ஐ கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு கட்டளை மேட்டு வாய்க்காலின் கரையோரங்களில் ஓரங்களில் 100 மரக்கன்றுகள் மற்றும் 1000 பனை விதைகள் விதைத்தனர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் மரக்கன்றுகள் அனைத்திற்கும் மருதூர் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் தயாரிக்கப்பட்ட இயற்கை மண்புழு உரம் இடப்பட்டது. இந்தப் பணியில் பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபட்டனர்.

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES