Tuesday , July 29 2025
Breaking News
Home / தமிழகம் / முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்
NKBB Technologies

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயத்திற்குட்பட்ட உப்பிடமங்கலம் பேரூராட்சியில் “மக்களை தேடி அரசு” தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். உப்பிடமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடனும்,வழிக்காட்டுதலின் படி நடக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அரசு மக்கள் குறைகளை தீர்க்க இந்த சிறப்பு திட்டத்தினை கொண்டு வந்துள்ளார். தமிழகம் முழுவதும் நடக்கும் இந்த திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் முதலமைச்சரின் நேரடிப்பார்வையின் கீழ் நடைபெறுகிறது.செப்டம்பர் 7 தேதி வரை மனுக்கள் பெறப்பட்டு தகுதிவாய்ந்த நபர்களுக்கு செப்டம்பர் மாத இறுதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதில் பெறப்படும் மனுக்கள் மீது 100 சதவீதம் நிறைவேற்றப்படும் என்றும், இது அரசியல் நிகழ்ச்சி அல்ல அரசு நிகழ்ச்சி பொதுமக்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். அனைவரது கோரிக்கைகளையும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான தமிழக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்று கூறினார். பின்னர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் முதியோர் உதவி தொகை, திருமண உதவி தொகை, பசுமை வீடு, வேளாண், மின்சாரம் குறித்தும் மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் பேரூராட்சி சமுதாய கூட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினார். கிருஷ்ணராயபுரம் தனி வட்டாட்சியர் பாலசுப்ரமணி, கரூர் கரூர் கோட்ட கலால் வட்டாட்சியர் கண்ணன், வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் உடனிருந்தனர்.

செய்தி : ஜாகீர் உசேன்

படம் : சிவா

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES