Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை அன்று கள ஆய்வு.!

தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை அன்று கள ஆய்வு.!

தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் (13/08/2022) சனிக்கிழமை அன்று கள ஆய்வு நடைபெற உள்ளது என மாநகர் தேமுதிக மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:-

இதய தெய்வம் கேப்டன்- அவர்களின் ஆணைக்கிணங்க கழக பொருளாளர், அண்ணியார் அவர்களின் ஆலோசனைப்படி, மாநில கழக துணை செயலாளரும், கழக அமைப்பு தேர்தல்- மண்டல பொறுப்பாளருமான பார்த்தசாரதி மற்றும் மாநில பொறியாளர் அணி துணை செயலாளரும், கழக அமைப்பு தேர்தல்- மாவட்ட பொறுப்பாளருமான கே.கே.கிருஷ்ணன் மற்றும்

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமாராகிய நான் மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 5 பகுதி கழகங்கள், 39வட்ட கழகங்களில் வருகின்ற 13/08/2022 (சனிக்கிழமை) அன்று நேரடி கள ஆய்வு நடத்த உள்ளோம்.

எனவே மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட 5பகுதி கழக செயலாளர்கள் மற்றும் 39 வட்டக்கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கழக அமைப்பு தேர்தல் (உட்கட்சி தேர்தல்) தொடர்பான அனைத்து பணிகளையும் அடுத்த 3நாட்களுக்குள் விரைவாக முடித்து, அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து படிவங்கள் மற்றும் ஆவணங்க ளையும் வருகின்ற 11/08/2022 (வியாழக்கிழமை) மாலை 7 மணிக்குள் என்னிடம் வழங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என கூறியுள்ளார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES