Sunday , February 1 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்ற ஒருவர் பலி.!மேலும் ஒருவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்.!
NKBB Technologies

மதுரை சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்ற ஒருவர் பலி.!மேலும் ஒருவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்.!

வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதை யொட்டி மூன்றாம் எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் நீர் அனைத்தும் வைகை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கரடிக்கல் அருகே அனுப்பப்பட்டி பகுதியை சேர்ந்த வினோத்குமார், அன்பரசன் ஆகியோர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் சோழவந்தான் அருகே திருவேடகம் பகுதி வைகையாற்றில் 6 பேரும் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆற்று நீர்சுழலில் சிக்கிய ராணுவ வீரர் வினோத்குமார் மற்றும் அன்பரசன் ஆகிய இருவர் தண்ணீரில் மூழ்கினர்.

தகவலறிந்து விரைந்து வந்த சோழவந்தான் காவல்துறையினர், மற்றும் தீயணைப்புத்துறையினர் மாயமானவர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரத்திற்கு பின் மேலக்கால் பகுதி வைகை ஆற்றுப்பாலம் அருகே அன்பரசனின் உடல் மட்டும் உயிரிழந்த நிலையில் தீயணைப்புதுறையினர் மீட்டனர். மேலும் ராணுவ வீரர் வினோத்குமாரின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES