
ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து அனைத்து வல்லம்பர் நாட்டார் அறக்கட்டளை நிர்வாகிகள் அசத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமழம் வட்டம் தேனிபட்டி,
கே.புதுப்பட்டியை மையமாக கொண்டு (29/11/2020) அன்று அனைத்து வல்லம்பர் நாட்டார் அறக்கட்டளை சார்பாக 24 மணி நேர இலவச அவசர ஊர்தி சேவை தொடங்கப்பட்டது.

இச்சேவையை நிறுவனத் தலைவர் பொன்.பாஸ்கரன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
இச்சேவை தொடங்கப்பட்ட 19 மாதங்களில் 418 க்கும் மேற்பட்ட இலவச அவசர ஊர்தி சேவையை வழங்கியுள்ளனர்.
சுற்று வட்டார 84 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு விபத்து மற்றும் அவசர காலங்களில் உயிர் காக்கும் சேவையும், 100 க்கும் மேற்பட்ட பிரசவ கால அவசர ஊர்தி சேவையை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ ராமன் அம்பலம், தலைவராக சிவா, பொதுச்செயலாளராக உறுதி நீலகண்டன், இணை பொது செயலாளராக சாந்தகுமார், செயலாளராக ராஜா, பொருளாளராக சிவராமன், துணைச் செயலாளராக கார்த்திக், இளைஞர் அணி தலைவராக பாண்டித்துரை, இளைஞர் அணி செயலாளராக சரத்குமார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.