
கேந்திர வித்யாலயா பள்ளி மாணவ/மாணவிகளுக்கிடையே 26-08-2022 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 40-42 கிலோ எடைப்பிரிவில் சிவகங்கை கேந்திர வித்தியாலயா பள்ளியில் 8ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் KS.பிரணவ் குமார் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

இவர் சோழன் குத்துச்சண்டை கழகத்தில் பயிற்சி பெறும் மாணவன் என்பதும் கடந்த
மூன்று வருடங்களுக்கு முன்னர் அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் முன்னிலையில் ஒரு நிமிடத்தில் 110 ஜம்பிங் ஜாக்ஸ் செய்து சோழன் உலக சாதனை படைத்து ஆட்சியர் கைகளால் உலக சாதனைக்கான சான்றிதழைப் பெற்றவர் என்பதும் மேலும் மாவட்ட ஆட்சியரிடம் இந்திய சுதந்திர தின நிகழ்விலும் குடியரசு தின விழா நிகழ்விலும் பாராட்டுச் சான்றிதழ் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்