Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கீரைத்துரையில் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார் அன்னதானம் வழங்கினார்

கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கீரைத்துரையில் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார் அன்னதானம் வழங்கினார்

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கீரைத்துரையில் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விபிஆர் செல்வகுமார் அன்னதானம் வழங்கினார்.

மதுரை,ஆக.31:

தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 70- வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் விதமாக,மதுரை மாநகர் வடக்கு மாவட்டம், தெப்பக்குளம் பகுதிக்கு         உட்பட்ட 86-வது வட்டக்கழக செயலாளர் நல்லமருது அவர்களின் ஏற்பாட்டில், இன்று புதன்கிழமை கீரைத்துரையில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ள பெரியோர்களுக்கு,மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,வி.பி.ஆர் செல்வகுமார் அவர்கள் தலைமையேற்று  அன்னதானம் வழங்கினார்‌.

முன்னதாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் சிலைக்கு மாலை அணிவித்து நிர்வாகிகளுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கீரைத்துரை ரயில்வே கேட் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இந்நிகழ்ச்சிக்கு தெப்பக்குளம் பகுதி செயலாளர் கோல்டு முருகன் முன்னிலை வகித்தார்.இதில் மாவட்டகழக துணை செயலாளர், பா.மானகிரியார், பொதுக்குழு உறுப்பினர்,புரட்சி செல்வம், பகுதி கழக செயலாளர், தெய்வேந்திரன், மாணவரணி துணை செயலாளர், மணிகண்டபிரபு, நெசவாளரணி செயலாளர், பிரகாஷ், அண்ணாநகர் பகுதி அவைத்தலைவர் கவிஞர் மணிகண்டன்,ஜெயபாண்டி, 42வது வட்டகழக செயலாளர், நாகராஜன் மற்றும் 86வது வட்டக் கழக நிர்வாகிகள், அவைத்தலைவர் கதிரேசன், நல்லுச்சாமி,முரசு அழகர், முத்துமணி, தனபாலன்,     மாரிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES