Friday , February 7 2025
Breaking News
Home / செய்திகள் / தரங்கம்பாடியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை சார்பாக மக்கள் குறை தீர்ப்பு முகாம்.!
MyHoster

தரங்கம்பாடியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை சார்பாக மக்கள் குறை தீர்ப்பு முகாம்.!

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை ஆணையரால் ஆணையிடப்பட்டது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் உத்தரவின் பேரில் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிங்காரவேலு வரவேற்றார்.

மேற்படி முகாமில் ஊராட்சிக்கு உட்பட்ட ஆக்கூர், அன்னப்பன்பேட்டை, சவுரியாபுரம், ஆக்கூர் முக்கூட்டு, பட்டவர்த்தி, உடையவர்கோயில் பத்து புங்கையன்தோப்பு, அம்மன்கோயில்பத்து உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம், பிறந்தநாள் தேதி மாற்றம், செல்போன் எண் மாற்றம், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் மற்றும் அட்டை வகை மாற்றம் ஆகியவை தொடர்பாக 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அதில் 490 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு பெற்று பொதுமக்கள் பயனடைந்தனர். மீதமுள்ள 35 மனுக்கள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளன. முகாமில் 2 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும், அட்டை வகை மாற்றம் தொடர்பான மனுக்களை வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை செய்திட அனுப்பி வைக்கப்பட்டும், மற்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றம் செய்யவும் வட்ட வழங்கல் அலுவலர் பாபு ஒப்புதல் ஆணை வழங்கினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ்குமார், வருவாய் துறை ஆய்வாளர் ராஜ், வட்ட வழங்கல் கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாயராஜ், வட்ட பொறியாளர் ஐயப்பன், அங்காடி விற்பனையாளர்கள் மதன கண்ணன், சோமு, மணிகண்டன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மயிலாடுதுறை செய்தியாளர் திருமுருகன்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி சீரடி சாய்பாபா மலைக்கோயிலில் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமி தலைமையில் மாபெரும் அன்னதானம்…

மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி மலை மேல் அமைந்திருக்கும் சீரடி சாய்பாபா மலைக்கோயில் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப் பாதை, சிவகங்கை மாவட்டம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES