Friday , January 30 2026
Breaking News
Home / இந்தியா / நண்பனுடன் மீண்டும் மாணவனாகிய நிகழ்வு…
NKBB Technologies

நண்பனுடன் மீண்டும் மாணவனாகிய நிகழ்வு…

இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் BSP பள்ளிக்கூடத்தில் Lead கான்ஃபரன்ஸ் நடந்தது. கூட்டத்தில் மாணவர்களுக்கான அறிவுரையும் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்தை தெரிந்து பி எஸ் பி ஸ்கூல் மேனேஜ்மென்ட் நிறைவேற்றியது.

நண்பனின் மகனும் மகளும் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களது தந்தை எனது நண்பன் முஸ்தாக்… வித்தியாசமாக எண்ணம் தோன்றியது போல இந்த பள்ளிக்கு… ஏன் பெற்றோர்களின் விருப்பத்தை தெரிந்து அதை நிறைவேற்ற கூடாது…? பள்ளியின் நிர்வாகம் பெற்றோர்களை தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவிக்குமாறு வாட்ஸ் அப் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்…. அதற்கு எனது நண்பன் முஸ்தாக், மீண்டும் தனது நண்பர்களுடன் மாணவனாக வேண்டும் என்று அவரது ஆசையை சொல்லி இருக்கிறார்… பள்ளி நிர்வாகம் உடனடியாக அவனது நண்பர்களிடம் பேசி ஒரு நண்பனை வரவழைத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்து மற்ற பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் திகைக்க வைத்தனர்…

இது போன்ற வித்தியாசமான மகிழ்ச்சியான செய்திகளை பார்க்கும்பொழுது நாம் அனைவரும் பின்னோக்கி சென்று நமது படிக்கும் காலங்களை நினைக்க வைக்கிறது….

இளைஞர் குரல் சார்பாக பி எஸ் பி பள்ளியின் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

– இளைஞர் குரல் பாலமுருகன்.

YouTube player
Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES