குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளதை முன்னிட்டு,மதுரை மூன்றுமாவடி நான்கு ரோடு சந்திப்பு அருகே பாஜக வண்டியூர் மண்டல் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் மண்டல் தலைவர் திருப்பதி, பொதுச்செயலாளர் சந்தோஷ் சுப்பிரமணியம், பிரச்சார பிரிவு மாநில தலைவர் பாஸ்கரன், விவசாய அணி மாநில பொறுப்பாளர் பால்ச்சாமி,ஊடக பிரிவு தலைவர் செல்வமாணிக்கம், மண்டல் பொதுச் செயலாளர் கோகிலா, மகளிரணி போதும்பொன்னு, பொன்னம்மாள் இளைஞரணி சுரேஷ் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.