Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க கோரி பாஜகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
NKBB Technologies

மதுரையில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க கோரி பாஜகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரையில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க கோரி பாஜகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரையில் தொடர்ந்து நடக்கும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும் எனவும், அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஊழலை கண்டித்தும், மாநகர் மாவட்ட பாஜக மகளிரணி, இளைஞரணி மற்றும் கூட்டுறவு பிரிவு சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி மாவட்ட தலைவர் மீனா இசக்கிமுத்து, இளைஞரணி தலைவர் பாரிராஜா. கூட்டுறவு பிரிவு தலைவர் செந்தில்வேல் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

இதில் கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலாளர் பாஸ்கரன், மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், மாவட்ட துணைத்தலைவர் வினோத்குமார், காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES